Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் வளர்ச்சித் துறையில், 7,783 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு குழந்தை வளர்ச்சித் துறையில் அங்கன்வாடி உதவியாளர்கள் பணிகளுக்கான 7,783 காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் வளர்ச்சித் துறையில், 7,783 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
என்னென்ன பணியிடங்கள்?
அங்கன்வாடி பணியாளர்கள் - 3,886
நுண் அங்கன்வாடி பணியாளர்கள் - 305
அங்கன்வாடி உதவியாளர்கள் - 3,592
இதில், அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். அதேபோல அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளுக்கான வயது வரம்பு முறையே 35 மற்றும் 40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் சமூக அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஊதிய விவரம்
அங்கன்வாடி பணியாளர் - மாதத்திற்கு ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை
நுண் அங்கன்வாடி பணியாளர் - மாதத்திற்கு ரூ.5,700 முதல் ரூ.18,000 வரை
அங்கன்வாடி உதவியாளர் - மாதத்திற்கு ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ள தேர்வர்கள், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு தேர்வு எதுவும் நடத்தப்படாது.
தேர்வு முறை
* மெரிட் லிஸ்ட்
* நேர்காணல்
குழு அமைப்பு
இந்த பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்ய, சிறப்புக் குழு அமைக்கப்படும். மாவட்டத் திட்ட அலுவலர், துணை இயக்குநர், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியரின் மதிய உணவுத் திட்ட உதவியாளர் உள்ளிட்டோர் குழுவில் இருப்பர்.
இவர்களுக்கு இது நிரந்தர அரசு வேலையாக இருக்கும். மூன்று பணியிடங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரம்பு, 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களின் தேர்வு முறை, இட ஒதுக்கீடு, விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம் என்று குழந்தைகள் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நேரில் இதுகுறித்த தகவல்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவினை அணுகலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

