மேலும் அறிய
World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!
உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..

தமிழ் சினிமாவிம் தண்ணீர் சம்பந்தப்பட்ட பாடல்கள்
1/6

உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..
2/6

சின்ன சின்ன தூறல் : “உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..”மழையை ரசிக்கும் ரசிகனின் மனதில் இருந்து நேரடியாக உதிர்ந்த பாடல்.
3/6

சின்ன சின்ன மழைத்துளிகள் : “சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..”மழையின் அழகை விவரித்து பாடும் பாடல் இது.
4/6

நதியே நதியே : “நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…நின்றால் கடலல்லோ…தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…ஓஹோ…தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…ஓஹோ…”நதியையும் பெண்ணையும் ஒப்பிட்டு பாடும் பாடலாக நதியே நதியே அமைந்திருக்கிறது.
5/6

மூங்கில் காடுகளே : “தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே..” இந்த பாடலில் கவிஞர் இயற்கையின் அழகைக் குறித்து பாடியிருப்பார். அதில் நீர் வீழ்ச்சி குறித்து வரிகளே இவை.
6/6

சொட்ட சொட்ட : “நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது..”நீருக்குள் முகம் பார்த்த ஜோடியை, மீண்டும் மழை சேர்த்தது. இது காதலிக்காக காதலன் பாடுவது.
Published at : 23 Mar 2023 12:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion