Parijatham Serial: துரத்தப்பட்ட மனைவி.. காதலியுடன் ரூம் உள்ளே சென்ற கணவன் - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் வர்ஷினியும் ஏற்காட்டுக்கு வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துரத்தும் விஷால்.. துரத்தப்பட்ட ஸ்ரீஜா:
அதாவது ஸ்ரீஜா போதை மருந்தை கலக்கி கொடுக்க முயற்சி செய்கிறாள். எதிர்பாராத விதமாக போதை மருந்து கலந்த ஜூஸ் பாதி விஷாலுக்கும் மற்றொரு பாதி ராகவ்வுக்கும் சென்று விடுகிறது.
ஜூஸ் குடித்த விஷால் போதையில் இசையை நெருங்க இசை தடுக்க முடியாமல் தவிக்கிறாள். மறுபக்கம் ராகவ் மற்றும் வர்ஷினி ஸ்ரீஜாவை வெளியே துரத்தி கதவை சாற்றிக் கொள்கின்றனர்.
கதவைத் தட்டிய ஸ்ரீஜா:
பிறகு ஸ்ரீஜாவுக்கு உண்மை தெரிந்து இருவரையும் பிரிக்க கதவை தட்டியபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























