மேலும் அறிய
Shreema Upadhyaya : நந்தினிக்கு டஃப் கொடுக்கும் ராஷ்ட்ரக்கூட இளவரசி..யாருப்பா இந்த பொண்ணு?
பரதம் முதல் மாடலிங் வரை அசத்தும் இப்பெண், பொ.செ இரண்டாம் பாகத்தில் 2 காட்சிகளில் மட்டும் இடம்பெற்று ட்ரெண்ட் ஆகியுள்ளார்.
ராஷ்ட்ரக்கூட இளவரசியாக நடித்த ஸ்ரீமா உபாத்யாயா
1/6

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
2/6

பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தில் ராஷ்ட்ரக்கூட மன்னன் மகளாக ஒருவர் காட்டப்பட்டிருப்பார்.
3/6

அவரைக் கொண்டு மதுராந்தகனை வளைக்கும் திட்டத்தை ராஷ்ட்ரகூட மன்னன் கையில் எடுத்திருப்பார்.
4/6

இரண்டு காட்சிகளில் மட்டுமே அந்த நடிகை நடித்திருப்பார். வசனங்களும் இருக்காது. ஆனால் அவரது அழகு ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். மாதுலி கதாபாத்திரத்தில் நடித்த அப்பெண்ணின் பெயர் ஸ்ரீமா உபாத்யாயா
5/6

இவர் பெங்களூருவைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார். கடந்த 19 ஆண்டுகளாக அவர் இந்த கலையில் சிறந்து விளங்குகிறார்.
6/6

நடனக்கலையை தாண்டி, மாடலிங்கும் செய்து வருகிறார். யோகா செய்வதும் இவருக்கு பிடிக்குமாம்.
Published at : 01 May 2023 04:53 PM (IST)
மேலும் படிக்க





















