மேலும் அறிய

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் மலை மேல் உள்ளது தீபத்தூண் அல்ல சர்வே கல் தான் என அரசு தரப்பு வாதிட்டு வந்த நிலையில், வரலாற்று தரவுகளின் படி மலை உச்சியில் உள்ளது சமணர் கால தூண் என நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் கார்த்தைகை தீபம் அன்று தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த சுவாமிநாதன் மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். பின்னர் அடுத்த நாள் மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 144ஐ அதிரடியாக ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.

அன்றும் மிகப்பெரிய படையுடன் தீபம் ஏற்ற சென்ற இந்து அமைப்பினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்த்து. அந்த வழக்கு விசாரனை தற்போது நடைபெற்று வருகிறது. 

இதனிடையே அரசு தரப்போ அந்த தீபத்தூணில் இதுவரை தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்தவித வரலாற்று சான்றுகள் இல்லை என வாதிட்டு வந்தது. அதே நேரத்தில் இந்து அமைப்புகள் தரப்பிலோ கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் மாறாக உச்சி பிள்ளையார் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தவறு என முறையிட்டனர்.

பின்னர் தொல்லியல் ரீதியாகவும் அந்த தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்காததால் இந்த வழக்கு இழுபறியானது. இதனிடையே அது தீபத்தூணே அல்ல ஆங்கிலேயர்கள் ஊன்றிய சர்வே கல் என்ற செய்தி பரவியது.

இந்நிலையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனது பக்க நியாயங்களை அடுக்கியது. திமுக எம்பி கனிமொழி, 
ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட சர்வே கல் தான் அந்த தூண். அதில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் இந்துக்களின் மனதை புண்படுத்தக்கூடியது. அந்த கல்லிற்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என முறையிட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய் அன்று விசாரனைக்கு வந்த போது இந்து அறநிலையத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமானதோ சர்வே கல்லோ அல்ல எனவும் அது சமண கால தூண் என தெரிவித்தது. 

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அது உண்மையில் கல்லா அல்ல தீபத்தூணா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும் விளக்கு ஏற்ற அனுமதிப்பது அருகிலுள்ள முஸ்லிம் ஆலயத்தின் உரிமைகளைப் பாதிக்குமா? என்ற கேள்விகளையும் எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget