மேலும் அறிய
PS 2 Nandhini : பழிவாங்க காத்திருக்கும் நந்தினி.. உயிர் தப்பிப்பாரா ஆதித்த கரிகாலன்?
இனம் புரியாத ஆன் ஸ்கீரின் கெமிஸ்டிரியை கொண்ட விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் இப்படத்தில் பிரிந்து வாடும் காதல் ஜோடிகளாக நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் பட ஸ்டில்ஸ்
1/6

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ராவணன் படத்தில் வீரா மற்றும் ராகினியாக நடித்த விக்ரமும் ஐஸ்வர்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாகவும் நந்தினியாகவும் நடித்துள்ளனர்.
2/6

இனம் புரியாத ஆன் ஸ்கீரின் கெமிஸ்டிரியை கொண்ட இருவரும் இப்படத்தில் பிரிந்து வாடும் காதல் ஜோடிகளாக நடித்துள்ளனர்.
3/6

சிறுவயதில் ஆதித்த கரிகாலன் மனதில் காதல் பூத்தது. ஒரு சில காரணங்களுக்காக நந்தினியை அவரிடம் இருந்து கரிகாலனின் பெற்றோர்கள் பிரித்து வைக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, பாண்டிய மன்னனுடன் நந்தினியை பார்க்கிறார். கோவத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நிராயுதபாணியான வீர பாண்டியனை கொள்கிறார்.
4/6

கெஞ்சி கூத்தாடும் நந்தினியின் முகத்தில் பாண்டியனின் ரத்த கறை மட்டுமே மிஞ்சுகிறது. சிறுவயதில் பல இன்னல்களை சந்தித்து வளர்ந்த நந்தினி வலிய விஷம் கொண்ட பாம்பை போல் கொடியவளாக மாறுகிறாள்.
5/6

‘இந்த கள்ளும், பாட்டும்.. இரத்தமும்.. போர்களமும்.. எல்லாமே அதை மறக்கத்தான். அவளை மறக்கத்தான். என்னை மறக்கத்தான்.’என ஒருபுறம் கரிகாலன் காயத்துடன் இருக்க, சோழ அரசை கருவறக்க, பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள் நந்தினி. தன்னாள் முடிந்த அனைத்து சதி வேலைகளையும் செய்ய துவங்கி, அருண்மொழிவர்மனையும் கொலை செய்ய இலங்கைக்கு, பாண்டியனின் ஆபத்துவதிகளை அனுப்பி வைக்கிறாள்.
6/6

அருண்மொழி வர்மன் இறந்துவிட்ட தகவல் கரிகாலனின் காதில் பட, கோவம் கொண்ட புலியாய் நந்தினியை கொலை செய்ய துடிக்கிறான். இறுதியாக பல ஆண்டுகளுக்கு பின் இருவரும் சந்தித்து கொள்கின்றனர். கரிகாலன் இறந்துவிடுவார் என்பது பலருக்கும் தெரியும். அவரின் உயிரை யார் மாய்கின்றனர் என்ற கேள்விக்கு பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகமே விடையளிக்கும்.
Published at : 27 Apr 2023 04:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement