மேலும் அறிய

திருவண்ணாமலை அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர்; அமைச்சரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வாணாபுரத்தில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்குவதை கண்டித்து பொதுப்பணி அமைச்சரை முற்றுகை .உங்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தருவதாக அமைச்சர் பெண்களிடம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மழுவம்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறும் முகாமை தொடங்கி வைக்க பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வந்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கிராமத்திற்கு தினந்தோறும் வழங்கப்படக்கூடிய குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மழுவம்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினந்தோறும் ஊராட்சி மூலம் வழங்கப்படக்கூடிய குடிநீர் வாணாபுரம் கிராமத்தை ஒட்டி உள்ள பெரிய ஏரி கரையோரம் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் மேல்நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு வருகிறது.


திருவண்ணாமலை அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர்; அமைச்சரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

 

அதன் பிறகு, மேல்நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குழாய்க்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வாணாபுரம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் ஏரியில் கலப்பதாலும், கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றுடன் குப்பைகளையும் சேர்த்து ஏரியில் கொட்டப்படுகிறது. பின்னர் ஏரியில் உள்ள தண்ணீர் மாசு ஏற்பட்டு ஏரிக்கரையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றில் நீர் உறிஞ்சப்பட்டு மின் மோட்டார் மூலம் மேல்நீர் தேக்கத் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய குடிநீர் பச்சை நிறமாகவும், கருப்பு நிறமாகவும் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சுகாதாரம் அற்ற தண்ணீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கக்கூடிய அவல நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 


திருவண்ணாமலை அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர்; அமைச்சரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

 

மேலும் குழாய் வரி, வீட்டு வரி உள்ளிட்டவற்றை மட்டும் முறையாக வசூல் செய்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் முறையாக சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினர். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் ஆனால் ஏழை எளிய மக்களான நாங்கள் குடிக்க சுகாதாரமான குடிநீர் மட்டும் தான் உங்களிடம் கேட்கிறோம் அது ஏன் முறையாக வழங்க மறுக்கிறீர்கள் என்று சாராமாரியாக கேள்வி எழுப்பினர்.  பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சராசரியாக கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் பொதுமக்களிடம் உங்களுக்கு புதியதாக மேல்நீர் தேக்க தொட்டி கட்டவுள்ளதாகவும், புதியதாக போர் போட்டும், புதியதாக வேறு ஒரு இடத்தில் புதிய கிணற் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
Embed widget