மேலும் அறிய

Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?

Hindi Imposition: இந்தியாவில் பல கோடி பேர் பேசினாலும் இந்தி மொழிக்கு, செம்மொழி (Classical Language) அந்தஸ்து கிடைக்காதது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hindi Imposition: செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான சில அடிப்படைகள் இந்தி மொழிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மொழி சர்ச்சை:

மொழிப்போர் முடிந்து 50 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பிரச்னை வெடித்துள்ளது. மும்மொழிக்கொள்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. எங்களுக்கான நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்தாலும் பரவாயில்லை, இந்தியை கட்டாய பாடமாக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இந்தி பேசப்பட்டாலும், தமிழுக்கு கிடைத்த ”செம்மொழி” அந்தஸ்து ஏன் அந்த மொழிக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கும். அதற்கான விடையை இங்கே அறியலாம்.

”செம்மொழி” அந்தஸ்து

இந்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு "செம்மொழி மொழிகள்" என்ற புதிய மொழி வகையை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இதுவரை, 11 மொழிகளுக்கு இந்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தமிழ் மொழிக்கு தான் ”செம்மொழி” அந்தஸ்து வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, அசாமீஸ், பெங்காலி, மராதி, பாலி மற்றும் ப்ராக்ரித் ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

”செம்மொழி” அந்தஸ்திற்கான தகுதிகள்:

மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க சில அடிப்படை தகிகளை கொண்டிருக்க வேண்டும். அதன்படி, 

  • 1,500–2,000 ஆண்டுகள் பழமையான ஆரம்பகால நூல்கள்/பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் உயர் தொன்மையை கொண்டிருக்க வேண்டும்
  • தலைமுறை தலைமுறையாக மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்படும் பண்டைய இலக்கியங்கள்/நூல்களின் தொகுப்பை பெற்றிருக்க வேண்டும்
  • வேறொரு பேச்சு சமூகத்திலிருந்து கடன் வாங்கப்படாத அசல் இலக்கிய மரபின் இருப்பு அவசியம்
  • நவீன மொழியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதால், பாரம்பரிய மொழிக்கும் அதன் பிற்கால வடிவங்களுக்கும் அல்லது அதன் கிளைகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சியின்மை இருக்கலாம்

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பூர்த்தி செய்து மூத்த மொழியாக விளங்குவதால் தான், தமிழுக்கு முன்னுரிமை அளித்து செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

”செம்மொழி” அந்தஸ்திற்கான பலன்கள்:

  • ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டவுடன், அந்த மொழியைப் படிப்பதற்கான ஒரு சிறப்பு மையத்தை அமைப்பதற்கு நிதி உதவி பெறுகிறது.
  • சிறந்த அறிஞர்களுக்கான இரண்டு முக்கிய விருதுகளுக்கான வாய்ப்பையும் திறக்கிறது.
  • கூடுதலாக, மத்தியப் பல்கலைக்கழகங்கள் தொடங்கி பல்வேறு கல்வி நிறுவனங்களில் செம்மொழி அறிஞர்களுக்கான தொழில்முறை இருக்கைகளை நிறுவ பல்கலைக்கழக மானியக் குழுவைக் கோரலாம்.

இதன் மூலம் அந்த மோழி மேலும் போற்றப்பட்டு, வளர்ச்சி பெற ஊக்குவிக்கப்படும்.

இந்திக்கு ”செம்மொழி” அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்?

இந்தி மொழி குறிப்பிடத்தக்க இலக்கிய மரபு மற்றும் நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலும், பண்டைய மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட இலக்கிய மரபுகளைக் கொண்ட தமிழ் போன்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது அது பெரும்பாலும் இளைய மொழியாகவே கருதப்படுகிறது. மேலும், இந்தி மொழியில் சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் உருது உள்ளிட்ட பல மொழிகளின் தாக்கம் காணப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள தகுதிகளின்படி, செம்மொழி அந்தஸ்து பெறும் மொழியில் வேறு எந்த ஒரு மொழியின் தாக்கமும் இருக்கக் கூடாது. ஆனால், இந்தியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மற்ற மொழிகளின் கலப்பு உள்ளது. அதன் காரணமாக இந்தியை ”செம்மொழி”யாக அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் அதிரடி முடிவு! சென்னை, திருச்சி: எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
விஜய் அதிரடி முடிவு! சென்னை, திருச்சி: எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" - சி.வி.சண்முகத்தின் ஏரியாவிலேயே சவால் விட்ட சசிகலா!
EPS slams DMK:
EPS slams DMK: "கொள்கை தான் வேறு.. திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு! மோடி முன்னிலையில் சீறிய எடப்பாடி..
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
DMK MDMK Alliance: வைகோவின் மதிமுக-விற்கு 4 சீட்டு.. இறுதியானது தொகுதிப் பங்கீடு! திமுக ஹாப்பி அண்ணாச்சி!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
Embed widget