![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
திருச்சி: தடுப்புச்சுவரை இடித்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கார்: கேரளா தம்பதி சம்பவ இடத்திலேயே பலி
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் தடுப்பு சுவரை உடைத்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கார், கணவன் - மனைவி சம்பவ இடத்திலே பலி.
![திருச்சி: தடுப்புச்சுவரை இடித்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கார்: கேரளா தம்பதி சம்பவ இடத்திலேயே பலி A husband and wife from Kerala were killed when their car fell into a 50 feet ditch in Trichy திருச்சி: தடுப்புச்சுவரை இடித்து 50 அடி பள்ளத்தில் விழுந்த கார்: கேரளா தம்பதி சம்பவ இடத்திலேயே பலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/e7ce6df260e428a3df8009d5fac187611702010990257184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாவட்டம் ,சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ,திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்த கார். காரில் பயணம் செய்த கணவன்- மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் தனது மனைவியுடன் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் வலது பக்க தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது. இதில் கார் முற்றிலுமாக நசுங்கி சேதம் அடைந்தது. மேலும் காரில் பயணித்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கணவன் மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேதம் அடைந்த காரை கிரேன் மூலம் ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)