மேலும் அறிய

திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு

காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி சேரன் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெட்ரோல் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.  

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆவூர் கீழத் தெருவை சேர்ந்த தங்கபாலு மகன் 24 வயதான சேரன் என்பவர் தனது தம்பி தினகரன் மற்றும் ஆவூர் பாப்பாரத்தெரு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோருடன் கடந்த ஜூன் 28ம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் ஆவூர் கடை தெருவிற்கு சேரனின் ஆட்டோ உரிமையாளரான ஷேக் அலாவுதீனிடம் கணக்கு ஒப்படைப்பதற்காக சென்று உள்ளனர். அந்த நேரத்தில் தினகரன் மற்றும் சிலம்பரசனை ஆவூர் கடை தெருவில் நிற்கும்படி சேரன் கூறிச் சென்றுள்ளார்.  அப்பொழுது அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஆவூர் சாலுவம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரான கரன், கௌதம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சாதி பெயரை கூறி திட்டி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் அணிந்திருந்த கடுக்கன் ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்து இதனை தட்டி கேட்ட சேரனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.


திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு

அதனை தொடர்ந்து சேரனின் தாய் அஞ்சலி தேவியையும் அவர்கள் சாதிப் பெயரால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி சேரன் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இழுக்கடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மூன்றாம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்படாத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சேரனின் அம்மா அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையை பரிசோதித்து அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடமிருந்து மனு பெறப்பட்டு  இந்த மனு மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்துள்ள தினகரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தற்போது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேரனின் அம்மா அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையில் இருந்த பெட்ரோல் கேனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget