மேலும் அறிய

திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு

காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி சேரன் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெட்ரோல் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.  

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆவூர் கீழத் தெருவை சேர்ந்த தங்கபாலு மகன் 24 வயதான சேரன் என்பவர் தனது தம்பி தினகரன் மற்றும் ஆவூர் பாப்பாரத்தெரு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோருடன் கடந்த ஜூன் 28ம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் ஆவூர் கடை தெருவிற்கு சேரனின் ஆட்டோ உரிமையாளரான ஷேக் அலாவுதீனிடம் கணக்கு ஒப்படைப்பதற்காக சென்று உள்ளனர். அந்த நேரத்தில் தினகரன் மற்றும் சிலம்பரசனை ஆவூர் கடை தெருவில் நிற்கும்படி சேரன் கூறிச் சென்றுள்ளார்.  அப்பொழுது அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஆவூர் சாலுவம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரான கரன், கௌதம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சாதி பெயரை கூறி திட்டி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் அணிந்திருந்த கடுக்கன் ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்து இதனை தட்டி கேட்ட சேரனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.


திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு

அதனை தொடர்ந்து சேரனின் தாய் அஞ்சலி தேவியையும் அவர்கள் சாதிப் பெயரால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த ஜூன் 29 ஆம் தேதி சேரன் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இழுக்கடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மூன்றாம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்படாத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சேரனின் அம்மா அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையை பரிசோதித்து அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


திருவாரூர்: வழக்குப்பதிவு செய்யாமல் இழுக்கடித்த போலீசார்: பெட்ரோல் கேனுடன் வந்த நபர்களால் பரபரப்பு

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடமிருந்து மனு பெறப்பட்டு  இந்த மனு மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்துள்ள தினகரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தற்போது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேரனின் அம்மா அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையில் இருந்த பெட்ரோல் கேனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Nitish Kumar: முதல்வர் பதவி வேண்டாம்.. நிதிஷ்குமார் ராஜினாமா.. அடுத்த பிளான் இதுதான்!
Nitish Kumar: முதல்வர் பதவி வேண்டாம்.. நிதிஷ்குமார் ராஜினாமா.. அடுத்த பிளான் இதுதான்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
"எங்களுக்கு மட்டும் நிதி இல்லையா?" திமுக அறக்கட்டளை நிதியையாவது கொடுங்கள் - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..
HDFC வங்கி ATM பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றம்! ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு? தெரிந்து கொள்ளுங்கள்!
HDFC வங்கி ATM பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றம்! ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு? தெரிந்து கொள்ளுங்கள்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Embed widget