மேலும் அறிய

திருவாரூர் : வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..

லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25800 பணம் சிக்கியது

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 800 பணம் சிக்கியது. போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரணை நடந்துவருகிறது
 
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்,  ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம், ஒசூர் போக்குவரத்து சோதனைச் சாவடி, நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகம், நாகை, திருவண்ணாமலை, திருவான்மியூர், அரியலூர், பெண்ணாடம், சிவகங்கை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. நாள்தோறும் வாகன பதிவு, புதுப்பித்தல், ஒட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு பணிகள் காரணமாக எந்தநேரமும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடன் இந்த அலுவலகம் காணப்படும். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் காவல் துறையினர் அதிரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் சோதனை நடத்தினர்

திருவாரூர் : வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..
இதனையடுத்து அந்த அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த வாகன பதிவு, ஒட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். இதில் பல்வேறு பணிகள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழிமுறை காரணமாக பணம் பரிமாற்றம் என்பது மிக குறைவு. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் உரிய கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 800 பணம் ரொக்கமாக சிக்கியது. இந்தப் பணம் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த இடைத்தரகர்கள் வைத்திருந்த பணம் என கூறப்படுகிறது. மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களை புகைப்படம் எடுக்கும் நபரிடமும் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

திருவாரூர் : வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கணக்கில் வராத பணம் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம், வாகன பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இரவு வெகுநேரம் வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

வயது 10 தான்... குவித்த பதக்கங்களோ ஏராளம்: தஞ்சை மாணவன் பிரஜேஸ் ராகவ்வின் அடுத்த சாதனை
வயது 10 தான்... குவித்த பதக்கங்களோ ஏராளம்: தஞ்சை மாணவன் பிரஜேஸ் ராகவ்வின் அடுத்த சாதனை
“அறிக்கை வெளியானால்தான் விமர்சிக்க முடியும்!” – கீழடி ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அதிரடி
“அறிக்கை வெளியானால்தான் விமர்சிக்க முடியும்!” – கீழடி ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அதிரடி
வேளாங்கண்ணி மாதா திருவிழா... பக்தர்களுக்கு ரயில் வசதி: தஞ்சாவூர் வழித்தடம் வழியாகவும் இயக்க எதிர்பார்ப்பு
வேளாங்கண்ணி மாதா திருவிழா... பக்தர்களுக்கு ரயில் வசதி: தஞ்சாவூர் வழித்தடம் வழியாகவும் இயக்க எதிர்பார்ப்பு
காவல் துறையில் லஞ்சமா?... புகார் அளிக்க தனி பிரிவு... உடனடி நடவடிக்கை உறுதி
காவல் துறையில் லஞ்சமா?... புகார் அளிக்க தனி பிரிவு... உடனடி நடவடிக்கை உறுதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget