Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
Iran vs Israel War: ஈரான் உச்ச தலைவர் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், கொடூரமாக பழிவாங்குவோம் என அந்நாடு எச்சரித்துள்ளது. அதற்கு ட்ரம்ப்பும் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கைகள் விடுத்துவந்த நிலையில், நேற்று முதல் அந்த தாக்குதல் தொடங்கியது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், அந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ள செய்தி இன்று காலை வெளியனது. இதைத் தொடர்நது, ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், ட்ரம்ப்பும் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளா. அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
கொல்லப்பட்ட உச்ச தலைவர் - எச்சரிக்கை விடுத்த ஈரான்
அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு கூறி, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, நேற்று ஈரான் மீதான தாக்குதலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடங்கின. அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வந் நிலையில், தனது அலுவலகத்தில் இருந்து படைகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளார்.
தொடக்கத்தில் இதை ஈரான் மறுத்த நிலையில், பின்னர் அந்நாட்டு அரசு ஊடகம் உள்ளிட்ட ஊடகங்கள் கமேனியின் மரணத்தை உறுதி செய்தன. தாக்குதலில் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச தலைவர் கமேனியின் படுகொலை மாபெரும் குற்றம் என்றும், பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்றும் ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தாங்கள் கொடுக்கப் போகும் பதிலடி, இஸ்லாமிய நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏராளமான ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது.
ட்ரம்ப் பதில் எச்சரிக்கை
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஈரானுக்கு பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் இன்று மிக கடுமையாக தாக்கப் போவதாக கூறியது. பழிவாங்குவதாக நினைத்து தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும். அவர்கள் அதை செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால், இதுவரை அவர்கள் சந்தித்திராத அளவில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்“ என்று கூறியுள்ளார்.























