மேலும் அறிய

திருவாரூர்: தலைக்கேறிய போதை.. சமாதானம் பேச குறுக்கே வந்த சித்தப்பா அடித்துக்கொலை!

மது போதையில் இருந்த பிரபாகரன் எங்கள் குடும்ப பிரச்னையில் தலையிடுவதற்கு நீ யார் என அவருடைய சித்தப்பா குமாரை தாக்கியுள்ளார்.

திருவாரூரில் மதுபோதையில் உறவினரை கொலை செய்த நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.
மதுவால் தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் தீங்கு ஏற்படும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மது போதையினால் ஏற்படும் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக மதுபோதையில் கொலை சம்பவத்தில் ஈடுபடுவது வழிப்பறியில் ஈடுபடுவது மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி மற்றவரின் உயிருக்கு ஊறு விளைவிப்பது என மதுவால் பல்வேறு மரணங்கள் தமிழகம் முழுவதும் நிகழ்ந்து  கொண்டிருக்கின்றன. மது அருந்துபவர்கள் போதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் வன்முறையில் ஈடுபடுவதுடன் உறவினர்கள்,பெற்ற தாய் தந்தை என பார்க்காமல் கூட மதுபோதையில் கொலை செய்து விடும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.


திருவாரூர்: தலைக்கேறிய போதை.. சமாதானம் பேச குறுக்கே வந்த சித்தப்பா அடித்துக்கொலை!

அந்தவகையில் திருவாரூரில் தனது சொந்த சித்தப்பாவையே மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொலை செய்திருக்கிறார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மேலப்பாலையூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய தந்தை ஜெயபால். இந்த நிலையில் பிரபாகரனுக்கும் அவருடைய தந்தை ஜெயபாலுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த பொழுது பிரபாகரனின் சித்தப்பா குமார் அவர்களை சமாதானம் செய்துள்ளார். இந்த நிலையில் கடுமையான மது போதையில் இருந்த பிரபாகரன் எங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிடுவதற்கு நீ யார் என அவருடைய சித்தப்பாவான குமாரை தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனை அடுத்து குமாரின் மனைவி பேபி குடவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.


திருவாரூர்: தலைக்கேறிய போதை.. சமாதானம் பேச குறுக்கே வந்த சித்தப்பா அடித்துக்கொலை!

குமாரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலப்பாலையூர் கிராமத்தில் மதுபோதையில் இருந்த பிரபாகரனை குடவாசல் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த குமாரின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் தனது சித்தப்பாவை கொலை செய்த சம்பவம் மேலப்பாலையூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மதுபோதையில் நடக்கும் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மதுவால் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் தீங்குகள் குறித்தும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும்  சட்ட விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
Cheapest Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
J Radhakrishnan IAS : ஜெ., கருணாநிதி ஆட்சியில் கெத்து காட்டிய ராதாகிருஷ்ணன் IAS.! டம்மியாக்கிய விஜய்- இது தான் காரணமா.?
ஜெ., கருணாநிதி ஆட்சியில் கெத்து காட்டிய ராதாகிருஷ்ணன் IAS.! டம்மியாக்கிய விஜய்- இது தான் காரணமா.?
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget