செக் புக் தொலைந்ததும் உடனடியாக உங்கள் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி இணையதளம், மொபைல் செயலி, வாடிக்கையாளர் சேவை எண் அல்லது நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று புகாரளிக்கலாம்.
Cheque Book: செக் புக் தொலைஞ்சிருச்சா? உடனே செய்ய வேண்டியது - இல்லன்னா நீங்களும் பொறுப்பு தானாம்..
Cheque Book: செக் புக் எனப்படும் காசோலை புத்தகம் தொலைந்துவிட்டால் பயனர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Cheque Book: செக் புக் எனப்படும் காசோலை புத்தகம் தொலைந்துவிட்டால் பயனர்கள் உடனடியாக செய்ய வேண்டியதை செய்ய தவறினால், நிகழும் பின் விளைவுகளில் அவருக்கு பொறுப்பு உள்ளதாம்.
செக் புக் தொலைந்துவிட்டதா?
செக் புக் எனப்படும் காசோலைப் புத்தகத்தை இழப்பது அல்லது திருடப்படுவது ஒரு சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். ஆனால் அது கடுமையான நிதி அபாயத்தை ஏற்படுத்தக்கூடும என்பது உங்களுக்கு தெரியுமா? அது தவறான கைகளில் சிக்கினால், உங்கள் கையொப்பத்தை போலியாக உருவாக்கி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கக் கூடும். உரிய நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் எந்த தாமதமும் மிகப்பெரிய இழப்புக்கு காரணமாக அமையலாம். எனவே, உங்கள் காசோலைப் புத்தகம் காணாமல் போனதை அறிந்தால், நிதி இழப்பைத் தடுக்க உடனடியாக செயல்படுவது மிகவும் அவசியமாகும்.
உடனடியான தகவல் பரிமாற்றம்
உங்கள் காசோலை புத்தகம் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டது என்பதை அறிந்ததுமே, தாமதமின்றி உங்கள் வங்கிக்கு அது குறித்த தகவலை தெரிவிக்கவும். வங்கி விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் சரியான நேரத்தில் வங்கிக்குத் தெரிவிக்கத் தவறி மோசடி பரிவர்த்தனை நடந்தால், நடந்ததற்கு வாடிக்கையாளரும் பொறுப்பேற்க நேரிடும். எனவே செக் புக் தொலைந்ததும் முதல் மற்றும் மிக முக்கியமான நடவடிக்கை என்பது, காசோலை புத்தகத்தைத் தடுக்க அல்லது தொடர்புடைய காசோலை எண்களில் பணம் செலுத்துவதை நிறுத்த அறிவுறுத்தலை வழங்க வங்கியைக் கோருவதாகும்.
செக் புக் பயன்பாட்டை தடுப்பது எப்படி
உங்களிடம் நெட் பேங்கிங் அல்லது உங்கள் வங்கியின் மொபைல் செயலி இருந்தால், உள்நுழைந்து "காசோலை சேவைகள்" அல்லது "கட்டணத்தை நிறுத்து" என்பதன் கீழ் உள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு, காசோலை புத்தகம் அல்லது குறிப்பிட்ட காசோலை எண்களை, வேறொருவர் பயன்படுத்துவதை தடுக்கலாம்.
உங்களிடம் நெட் பேங்கிங் வசதி இல்லையென்றால், வங்கியின் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்து உங்கள் காசோலை புத்தகத்தை முடக்க கோரிக்கை எழுப்பலாம். அதனை செயல்படுத்துவதற்கு முன், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வங்கி பிரதிநிதி உங்களிடம் சில சரிபார்ப்பு கேள்விகளைக் கேட்கலாம்.
இதுபோக, நீங்கள் உங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்றும் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். அங்கு நீங்கள் ஒரு கோரிக்கைப் படிவத்தை நிரப்ப வேண்டி இருக்கும். இது துல்லியமாக பூர்த்தி செய்யப்பட்டு செயல்முறையைத் தொடங்க சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
காவல்துறையில் எப்போது புகார் அளிக்கலாம்?
காசோலை புத்தகம் திருடப்பட்டதாகவோ அல்லது தொலைந்துபோனதாகவோ உணர்ந்தால், காவல்துறையில் புகார் அளிப்பது நல்லது. காரணம் பின்நாட்களில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், காவல் துறை அறிக்கை முக்கியமான சான்றாக இருக்கும். செக் புக் பயன்பாட்டை தடுத்த பிறகு, வங்கியிடமிருந்து SMS அல்லது மின்னஞ்சல் மூலம் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் இது உதவிகரமாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய செக் புக்கிற்கு முறைப்படி வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். புதிய காசோலை எண்களைப் பெற்றவுடன் பாதுகாப்பாகப் பதிவு செய்ய வேண்டும். வங்கிக்கு உடனடியாகத் தெரிவிக்கத் தவறினால் காசோலை தவறாகப் பயன்படுத்தப்படலாம், மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கி பொறுப்பேற்க மறுக்கக்கூடும். இழந்த பணத்தை மீட்டெடுப்பது பின்னர் மிகவும் கடினமாகிவிடும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
Frequently Asked Questions
செக் புக் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
செக் புக் தொலைந்த பிறகு உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கத் தவறினால் என்ன ஆகும்?
உடனடியாகத் தெரிவிக்கத் தவறினால், உங்கள் கையொப்பத்தைப் போலியாகப் பயன்படுத்தி பணத்தை எடுக்க நேரிடலாம். தவறாகப் பயன்படுத்தப்பட்டால், இழப்பிற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
செக் புக்கை எப்படி தடுப்பது?
வங்கி இணையதளம், மொபைல் செயலி அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்து உங்கள் செக் புக் பயன்பாட்டை முடக்கக் கோரலாம். குறிப்பிட்ட காசோலை எண்களை நிறுத்தி வைக்கவும் கோரிக்கை விடுக்கலாம்.
செக் புக் திருடப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டுமா?
ஆம், செக் புக் திருடப்பட்டதாக உணர்ந்தால் காவல்துறையில் புகார் அளிப்பது நல்லது. எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் காவல் துறை அறிக்கை முக்கிய சான்றாக உதவும்.
























