மேலும் அறிய

வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டுமா... உருட்டிகிட்டு கீழே விழ வேண்டுமா?: தினமும் ஒரே இம்சை.. புலம்பும் தஞ்சை மக்கள்

தினம், தினம் இந்த தரைமட்ட பாலத்தை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் போது சிரமத்துடனேயே சென்று வருகின்றனர்.

 

தஞ்சாவூர்: நாங்க இந்த பகுதியில் வாகனம் ஓட்டிட்டு போகணுமா அல்லது உருட்டிகிட்டு கீழே விழணுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் தஞ்சை மக்கள். எதற்காக தெரியுமா?

தஞ்சை மேல அலங்கம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது அமைக்கப்பட்ட தரைமட்ட பாலம் சாலையில் இருந்து 1 அடி உயரத்துக்கு மேல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டன.

குறிப்பாக மேலவீதி, பழைய பஸ் நிலையம் பகுதி, தெற்குவீதி, வடக்கு வீதி, கீழராஜவீதி, கொடிமரத்து மூலை, ரயிலடி, மகர்நோன்புச்சாவடி, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டன. மழை காலங்களில் பெய்யும் மழைநீர் இந்த வடிகால் வழியாக சென்று நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில் இந்த வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் சாலை சந்திப்புகளில் எளிதாக செல்லும் வகையில் தரைமட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் உள்ள முருகன்கோயில் முன்பும் தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளன. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் சாலையில் இருந்து ஒரு அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இதனால் இதனை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 சாலையில் எந்த சாலையில் இருந்து வந்தாலும் தரைமட்ட பாலத்தில் ஏறி இறங்குவதற்குள் வாகனமும் சேதம் அடையும் நிலை தான் உள்ளது.

தரைமட்ட பாலத்தில் எளிதாக செல்லும் வகையில் சாலை உயர்த்தப்படாமலும் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பாலத்தின் ஒரு ஒரத்தில் வாகனங்களில் செல்கின்றனர். இது தவிர கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றன. 

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் வடிகால் வாய்க்காலில் கட்டப்பட்ட தரைமட்ட பாலம் சாலையில் இருந்து 1 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை உயர்த்தப்படவில்லை. இந்த வழியாகத்தான் மேலவீதி, அரண்மனை வளாகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகிறார்கள். அவர்கள் இந்த தரைமட்ட பாலம் உள்ள பகுதிக்கு வரும் போது இறங்கி சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை தான் காணப்படுகிறது.

பாலம் உயர்த்தி கட்டப்பட்ட போதும் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தினம், தினம் இந்த தரைமட்ட பாலத்தை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் போது சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் சிறப்பான முறையில் அமைய வேண்டும். ஆனால் சாலையை உயர்த்தாமல் தரைமட்ட பாலத்தை மற்றும் உயர்த்தி சரி செய்தால் வாகனங்கள் எவ்வாறு சென்று வர முடியும். இதை இனியாவது உணர்வு உடனடியாக சாலையை உயர்த்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
Thanjavur District Power Shutdown (04.07.2026): நாளைக்கு கரண்ட் 'ஆஃப்'... பாபநாசம், திருப்புறம்பியம் பகுதி மக்களே, இன்றே சார்ஜ் போட்டு ரெடி ஆகிடுங்க!
Thanjavur District Power Shutdown (04.07.2026): நாளைக்கு கரண்ட் 'ஆஃப்'... பாபநாசம், திருப்புறம்பியம் பகுதி மக்களே, இன்றே சார்ஜ் போட்டு ரெடி ஆகிடுங்க!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Embed widget