மேலும் அறிய

பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!

பகுதிநேர ஆசிரியர்களை தாமதமின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2012ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பகுதி நேர ஆசிரியர்களாக ஓவியம், உடற்கல்வி, கணினி அறிவியல், தையல் என கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக 5,000 ரூபாய் ஊதியத்தில் 15,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

13 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணியாற்றிய போதிலும் தற்போது 12,500 ஊதியம்தான் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக பெறுகிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் பள்ளிகளின் மற்ற வேலைகளையும் பார்க்கும் இவர்கள் பள்ளி நாட்கள் முழுவதுமாக பணியாற்றுகின்றனர். 

13 ஆண்டுகளுக்கும் மேலாக..

13 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மே மாதம் சம்பளம், பொங்கல் ஊக்கத் தொகை, மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடும் போது கணிசமான தொகை ஊதிய உயர்வாக வழங்கப்படுகிறது.

இதேபோல்தான் பணிநிரந்தரம் வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தின் போது 23-01-2026 அன்று அறிவித்த சம்பள உயர்வு ரூ.2,500 மே மாத உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் மற்றும் சிறப்பு மதிப்பெண் போன்ற உறுதிகள் இன்னும் அரசாணையாக்காமல் இருப்பதால் நடைமுறைக்கு வரவில்லை. காலம் கடந்த இந்த 3 அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் சந்திக்கின்ற வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. இந்தக் குறைந்த ஊதியம் அவர்கள் குடும்பத்தை கவனிப்பதற்கும், பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் போதுமானதல்ல. 

பகுதிநேர ஆசிரியர்கள் தலைகுனியாமல் இருக்க முடியும்

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என சொல்லுகிற முதல்வர் ஸ்டாலின் அதை செயலில் காட்ட குறைந்த சம்பளத்தில் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் குடும்பங்களை முன்னேற்ற 2012-ம் ஆண்டுக்கு முன்பாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை ஆகிய பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்ததை பின்பற்றி, நிரந்தரம் செய்யலாம். பணி நிரந்தரம் செய்தால் காலமுறை சம்பளம், அரசு சலுகைகள், பணப் பலன்கள் கிடைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தலைகுனியாமல் இருக்க முடியும்.

அல்லது மாதம் ரூ.30 ஆயிரம் கிடைக்கும் வகையில் காலமுறை ஊதியமாகமாகவும் வழங்கலாம். அத்துடன் ஏற்கனவே இறந்து போன பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வாழ்வாதார நிதியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget