மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அதிகம் வலம் முதலைகளை பாதுகாக்கவும், சுற்றுலாதலமாக மேம்படுத்தவும் கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை அமைக்கும் கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

மலைப்பிரதேசங்களில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளால் அவ்வப்போது அப்பகுதி மக்கள் அவதிப்படுவதை போல், கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஒட்டியுள்ள கிராமங்களில் அவ்வப்போது முதலை ஊருக்குள் புகுந்து மாடு, ஆடுகளை கடிப்பதோடு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. முதலை கடித்து ஒரு சிலர் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம்  முக்கொம்பு காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் ஆறு நாகை மாவட்டம் மகேந்திரபள்ளியில் சென்று வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆறு தான் தஞ்சை மாவட்டத்தையும் அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களையும் பிரிக்கும் எல்லைக்கோடாக உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கொள்ளிடம் ஆறு தஞ்சாவூர் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் ஓடிவரும் போது அங்கு ஒரு மணற்திட்டு உருவானது. இந்த பகுதி அணைக்கரை என அழைக்கப்பட்டது. மேற்கு பகுதியில் கொள்ளிடம் இரண்டாக பிரிந்து இரண்டரை கி.மீட்டர் தூரம் சென்று மீண்டும் ஒன்றாக இணைந்து கொள்ளிடம் செல்கிறது. இந்த ஆற்றின் நடுவே உருவான “அணைக்கரை” தீவு போல் காணப்படுகிறது. இந்த ஆற்றிலிருந்து வடக்குப் பகுதியில் வடவாறு பிரிந்து வீராணம் ஏரிக்கு செல்கிறது. கடலூர் மாவட்ட பாசனத்துக்கு முழுமையாக வடவாறும், வீராணமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணைக்கரையில் தண்ணீரை பகிர்ந்து விநியோகம் செய்ய கீழணையை பிரிட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர் காட்டன் என்பவர் கட்டினார்.  
 
இந்த பகுதியில் தண்ணீர் பகிர்ந்து வழங்குவதால் ஆண்டு முழுவதும் அணைக்கரையில் தண்ணீர் தேங்கியிருக்கும். இங்கு தேங்கியுள்ள தண்ணீரில் ஏராளமான முதலைகள் வசித்து வருகிறது. இந்த முதலைகள் அவ்வப்போது தண்ணீரிலிருந்து வெளியே வந்த மணற்பரப்பில் ஓய்வெடுப்பதும், அப்படியே ஊருக்குள் புகுந்து விடுவதுமாக உள்ளது. அப்போது பிடிபடும் முதலைகளை கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விடுவது வழக்கம். கும்பகோணம் பகுதியில் நவக்கிரக மற்றும் பரிகார கோயில்கள் ஏராளமாக உள்ளது. இந்த கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில்கள் நடை சாத்தப்படும் அந்த இடைப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் அணைக்கரைக்கு சென்று முதலைப்பண்ணைகளை பார்வையிட ஏதுவாக இருக்கும்.

கொள்ளிடம் ஆற்றில் முதலைப் பண்ணை; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: தீவு போல் காட்சியளிக்கும் அணைக்கரையில் எப்போதும் தண்ணீர் தேங்கியிருக்கும். அதே போல் அணைக்கரை முதல் மதனத்தூர் வரை கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் காடுகள் அதிகம் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பறவைகள் வசித்து வருவதால் இந்த பகுதியை பறவைகள் சரணாலயமாகவும், அணைக்கரையை பொழுபோக்குடன் கூடிய சுற்றுலா தலமாகவும் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்கரையில் ஏராளமான முதலைகள் வசித்து வருவதால் இங்கு முதலைப்பண்ணை அமைத்தால் அதனை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக அமையும்.
 
மேலும் கும்பகோணம் வர்த்தக ரீதியாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். கோயில்களுக்கும், சுற்றுலாவுக்கும் இப்பகுதிக்கு வரும்போது அவர்கள் பொழுபோக்க இடமில்லாமல் உள்ளது. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்காவை விட்டால் வேறு ஏதும் இடமில்லை. தமிழக சுற்றுலாத்துறையினர் அணைக்கரையில் முதலை பண்ணை அமைத்தால் அப்பகுதி சுற்றுலா தலமாக விளங்குவதோடு, முதலைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! இதுவரை ரூ .1.14 கோடி பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! இதுவரை ரூ .1.14 கோடி பறிமுதல்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
100 சதவீத வாக்கு... தஞ்சாவூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
100 சதவீத வாக்கு... தஞ்சாவூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
2 நாட்கள் விடுமுறைக்குப் பின் என்ன நடக்கும்? தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
2 நாட்கள் விடுமுறைக்குப் பின் என்ன நடக்கும்? தேர்தல் களம் சூடுபிடிக்குமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Iran Attack US Firms: “உயிர காப்பாத்திக்கணும்னா ஓடிடுங்க“, டைம் குறித்த ஈரான்; 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
“உயிர காப்பாத்திக்கணும்னா ஓடிடுங்க“, டைம் குறித்த ஈரான்; 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
Embed widget