மேலும் அறிய

மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் விடப்படுவதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை அடுத்த வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் விடப்படுவதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

 

இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், காவிரிப்படுகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச ஏலத்துக்கு ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அழைப்பு விடுத்திருக்கிறது. கடந்த 10-ஆம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஏலம் தொடர்பாக இணைய வழியாக கருத்து பரிமாற்றம் வரும் ஜூன் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதென இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. உடனடியாக இது கைவிடப்பட வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பபு வலியுறுத்துகிறது.


மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

மேலும், கண்டுபிடிக்கப்பட்ட சிறு எண்ணெய் வயல்கள் என்ற பெயரில் புதுக்கோட்டையில் நெடுவாசல் அருகில் வடதெரு என்கிற கிராமத்தில் 463 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 19 எண்ணெய் கிணறுகளை அமைக்க திட்டமிட்டு, அதற்கான ஏலம் தற்போது நடைபெற உள்ளது. ஓஎன்ஜிசியும், ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனமும் ஏற்கெனவே ஆய்வு செய்து வைத்திருந்த அந்த நிலங்களை அவர்களிடமிருந்து பறித்து, பன்னாட்டு முதலாளிகளிடம் இந்திய அரசு தற்போது ஒப்படைக்கிறது. இந்தியா முழுவதும் 75 எண்ணெய் வயல்களிலிலும் இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள். 


மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

இந்த திட்டத்தில் நீரியல் விரிசல் என்ற அபாயகரமான ரசாயனத்தை பயன்படுத்தி செயற்கை பூகம்பத்தை உருவாக்கி எடுக்கக்கூடிய மரபு சாரா எண்ணெய் எரிவாயு எடுப்பு இதில் நடத்தப்பட்டவுள்ளது என அவர்களே கூறியிருக்கிறார்கள். எனவே, வடதெரு கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களும் இதனால் அழிவுக்கு உள்ளாகும். 2021 பிப்ரவரியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. ஆளுநரும் இதற்கு கையெழுத்திட்டுள்ளார். 


மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 5 வட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் வருகிறது. இந்த பகுதியிலேயே அடாவடியாக இந்த ஏலத்தை அரசு நடத்த முயற்சிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டெல்டா மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் - எரிவாயு கிணறுகளால் இப்பகுதி மக்கள் பலவிதமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் விதமாக, மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என அடுத்தடுத்து பல ஆபத்தான திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்கள். இதன் பலனாக, கடந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்நிலையில், தற்போது இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் சர்வதேச யோகா தினம் கோலாகலம்: பெரிய கோயில், மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
"தூய்மை தஞ்சை" எனும் உன்னத சுகாதார இயக்கம்... தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி தொடக்கி வைத்தார்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
காவல் நிலையமா? கலைக்கூடமா? அறிவுப் பெட்டகமாய் உருவெடுத்த தஞ்சை எஸ்பி அலுவலக வளாகம்
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
Tamilnadu Round Up: சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
Embed widget