மேலும் அறிய

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.  அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் தங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு இடம் வழங்கப்படும்.  பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும். அரசு விடுதிகளில் தங்காமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா மனைவி பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.


காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கி வரும் திட்டத்திற்க்கு, அன்னதான நன்கொடை வழங்கிட விரும்புவோர் அறநிலையத் துறை இணையதளத்தின் “http://hrce.tn.gov.in” மூலம் நேரடியாக வழங்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  

நாடு முழுவதும், கடந்த 24 மணிநேரத்தில் 1,14,428 புதிதாக கொரோனா நோய்த் தொற்றினால்   பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 2,84,601 நோயாளிகள் குணமடைந்தனர். தொற்றிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் 90.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி பத்து மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து, மத்திய தொகுப்பு மூலம் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.    

ஓ.என்.வி இலக்கிய விருதைத் திருப்பி கொடுப்பதாகவும், பரிசுத் தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 16 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 680 ஆகும்.  தமிழ்நாட்டில் இன்றும் கொரோனா தொற்று காரணமாக 486 நபர்கள் உயிரிழந்தனர்.

கேரளாவில், ஜூன் 9-ஆம் தேதி வரை தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. குழந்தைக்கு 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூ 10 லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தோரை சார்ந்திருப்பவர்களுக்கு பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   

மேலும் வாசிக்க: 

 1.  ONV விருதே வேண்டாம்.. உண்மையை உரசிப் பார்க்க வேண்டாம் - வைரமுத்து 

2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Embed widget