மேலும் அறிய

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை மாநில முதல்வர்கள் அறிவித்து வரும் நிலையில் 10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தொற்று மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளிலும் தடுப்பூசி போடுவதை ஊக்கபடுத்துவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மாநில அரசுகள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பெற்றோரை இழந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.  கொரோனா தொற்று காரணமாக தங்களின் இரண்டு பெற்றோரையும், காப்பாளர்களையும் இழந்துள்ள குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை மாதந்தோறும் உதவித் தொகையும் 23 வயது நிரம்பும்போது 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு புதிதாக இருந்தாலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத உதவித் தொகையும் நிவாரணத் தொகையையும் அளிக்கும் திட்டத்தை ஏற்கெனவே ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துவிட்டன.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு

நேற்றைய தினம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில் கேரள மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்கத்தில் 3 லட்சம் வைப்புத் தொகையும் 18 வயது நிரம்பும் வரை மாத உதவித்தொகையாக ரூபாய் 2ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் வைப்புத் தொகையாக வைத்து 18 வயது நிறைவடையும் போது அவர்களுக்கு வட்டித் தொகையுடன் அதனை வழங்கவும் 18வயது நிறைவடையும் வரை உதவித் தொகையாக மாதம் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் தங்கிட முன்னுரிமை அளிக்கவும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக்கட்டணங்களை அரசே ஏற்கும் எனவும் கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கும் அவர்களின் ஒற்றை பெற்றோருக்கும் உடனடி நிவாரணமாக 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு

ஒடிஷா மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கும் ஆந்திராவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் 10 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என அம்மாநில  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் மத்திய பிரதேசத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5000 நிதி உதவியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget