மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்!

கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் அதில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை 

தமிழகத்தில் அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதீத கனமழைபெய்யுது வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்!

மழை எச்சரிக்கை 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, அக்டோபர் 16 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், , விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. அதேபோன்று புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்!

மயிலாடுதுறை மாவட்டம் நிலவரம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் இன்று காலை மணி வரை மிதமான மழையானது பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் சராசரியாக 9.83 மில்லிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 5 மிமீ, மணல்மேடு 2 மிமீ, சீர்காழி 7.60 மிமீ, கொள்ளிடம் 40.20 மிமீ, தரங்கம்பாடி 1 மிமீ,செம்பனார்கோவில் 3.20 மிமீ என மொத்தம் மாவட்ட முழுவதும் பரவலாக 59.00 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 7.60 மிமீ மழையும், குறைந்த அளவாக தரங்கம்பாடியில் 1.00 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை 

மேலும் தொடர்ந்து பெரும் மழை பொழிவு இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மழையின் அளவு குறைவாக உள்ள போதிலும், மாவட்டத்திலுள்ள 28 கடலோர மீனவர் கிராமங்களில் மிதமான காற்று வீசுவது உடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து கிராம மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள கடலுக்கு செல்லாத விசைப்படகுகள், பைபர் படகுகள் முகத்துவாரங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.


மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்!

பேரிடர் மீட்புப் படை முகாம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தொடர் மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க அரக்கோணத்தில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி வந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 60 வகையான உபகரணங்களுடன் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் பதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு இங்கிருந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
Redmi Turbo 5 Review: எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
Skoda Kodiaq RS: பட்டையை கிளப்பும் டர்போ என்ஜின்; ஸ்கோடா கோடியாக் RS முன்பதிவு தொடக்கம்; விலை, அம்சங்கள் என்ன.?
பட்டையை கிளப்பும் டர்போ என்ஜின்; ஸ்கோடா கோடியாக் RS முன்பதிவு தொடக்கம்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget