மேலும் அறிய
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Mar. 3rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு மாதாந்திர சிறப்பு நிதியுடன் ரூ.2000 கூடுதலாக வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவக் குடும்பங்களுக்கு ரூ.8,000 மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
- திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்ற இறுதி முடிவு இன்று தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசின் முடிவை பொறுத்து காலியாக உள்ள 4 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
- நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டீக்கடை அருகே நின்றிருந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- நெல்லை கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக மற்றும் தவெக, இச்சம்பவத்திற்கு திமுக வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.15,650-க்கு விற்பனை.
- ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தனது தார்மீக பொறுப்பிலிருந்து விலகும் செயல் என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீது தாக்குதல் நடைபெறும் எனவும் எச்சரிக்கை.
- நோயாளிகளையும், குழந்தைகளையும் குறிவைப்பது மனிதாபிமானக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் உலகம் இதை கண்டிக்க வேண்டும் எனவும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, UAE, ஏமன், சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- ஈரான் மீது 4 முதல் 5 வாரங்களுக்கு போர் தொடரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 பேர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்.
- மத்திய கிழக்கில் நடந்துவரும் போரில், ஈரானுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ள சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















