மேலும் அறிய

Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!

தென் மாவட்டங்களில் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே சாதிய ரீதியிலான தாக்குதல் வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடை முன்பு நேற்று இரவு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது 3 இருசக்கர வாகனத்தில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென டீக்கடை முன்பு வந்தது. 

அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை டீக்கடை முன்பு வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் தப்பியோடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று தங்களிடம் இருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்தனர்.  இதில் வட மாநில தொழிலாளி ஒருவரும், ஜான் மார்க் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன்,  பிரபாகரன் மற்றும் ராமசாமி  வீரங்குளத்தைச் சேர்ந் கணேசன் மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த சஸ்கியம்மார் ஆகியோர் காயமடைந்தனர்

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களின் அலறல்  சத்தம் கேட்டு அப்பகுதிக்கு ஓடி வந்த அக்கம் பக்கத்து மக்கள் 5 பேரையும்  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக போலீசார் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு உயிரிழந்தவர்கள் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அப்பகுதி மக்கள் இந்த இரட்டை கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலீசார் அந்த வாகனமும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழலை தவிர்க்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே சாதிய ரீதியிலான தாக்குதல் வருகிறது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

2 பேர் கொலை, 4 பேர் படுகாயம் என்ற இந்த கொடூர தாக்குதல் சாதிய ரீதியில் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் சம்பவம் காரணமாக நிகழ்ந்ததா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் ; ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்
இன்ஸ்டாகிராம் காதல் ; ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்
"உனக்கு கவுன்சிலிங் பண்ணனும்" ரூம் போட்டு மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்
போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – கோவையில் வடமாநில இளைஞர் கைது
போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – கோவையில் வடமாநில இளைஞர் கைது
29 வகை வெளிநாட்டு மதுபானம்... தேர்தல் ரெய்டில் சிக்கிய லக்சுரி கார்...
29 வகை வெளிநாட்டு மதுபானம்... தேர்தல் ரெய்டில் சிக்கிய லக்சுரி கார்...
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Israel War:
Iran Israel War: "ஈரான் போரை ஆதரிக்க முடியாது.." அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் ராஜினாமா ! அதிர்ச்சியில் ட்ரம்ப்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையில் களமிறங்கப்போகும் தவெக தலைவர்கள் லிஸ்ட்!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையில் களமிறங்கப்போகும் தவெக தலைவர்கள் லிஸ்ட்!
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Embed widget