மேலும் அறிய

Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!

தென் மாவட்டங்களில் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே சாதிய ரீதியிலான தாக்குதல் வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடை முன்பு நேற்று இரவு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது 3 இருசக்கர வாகனத்தில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென டீக்கடை முன்பு வந்தது. 

அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை டீக்கடை முன்பு வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் தப்பியோடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று தங்களிடம் இருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்தனர்.  இதில் வட மாநில தொழிலாளி ஒருவரும், ஜான் மார்க் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன்,  பிரபாகரன் மற்றும் ராமசாமி  வீரங்குளத்தைச் சேர்ந் கணேசன் மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த சஸ்கியம்மார் ஆகியோர் காயமடைந்தனர்

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களின் அலறல்  சத்தம் கேட்டு அப்பகுதிக்கு ஓடி வந்த அக்கம் பக்கத்து மக்கள் 5 பேரையும்  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக போலீசார் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு உயிரிழந்தவர்கள் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அப்பகுதி மக்கள் இந்த இரட்டை கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலீசார் அந்த வாகனமும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழலை தவிர்க்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே சாதிய ரீதியிலான தாக்குதல் வருகிறது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

2 பேர் கொலை, 4 பேர் படுகாயம் என்ற இந்த கொடூர தாக்குதல் சாதிய ரீதியில் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் சம்பவம் காரணமாக நிகழ்ந்ததா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Embed widget