மேலும் அறிய

சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..

சீர்காழி அருகே டாஸ்மாக் கடை வாசலில் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் கள்ளமது அருந்தியதால் உயிரிழந்ததாக கூறி கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மதுபான கடை திறப்பதற்கு முன்பாகவே அங்கு வந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. "பார்" பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளமதுவை அருந்தியதே உயிரிழப்புக்குக் காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னலக்குடி கிராமத்தில் அரசு மதுபான கடை (கடை எண்: 5766) இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைக்கு இன்று காலை, சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் வந்துள்ளார். மதுபான கடை திறப்பதற்கான நேரத்திற்கு முன்பாகவே அவர் அங்கு வந்து காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக சதீஷ் திடீரென கடை வாசலிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள், உடனடியாக அவருக்குத் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ய முயன்றனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும், வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு உறுதி

தகவல் அறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள், மயங்கிக் கிடந்த சதீஷைப் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இச்செய்தி காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, உயிரிழந்த சதீஷின் உறவினர்கள் மற்றும் நெம்மேலி கிராம மக்கள் சம்பவ இடத்திற்குத் திரளாக வரத் தொடங்கினர்.

உறவினர்களின் பகீர் குற்றச்சாட்டு

சதீஷின் உடலைக் கைப்பற்ற முயன்ற காவல்துறையினரை உறவினர்கள் தடுத்து நிறுத்தினர். மதுபான கடை திறப்பதற்கு முன்பே, அதன் அருகே செயல்பட்டு வரும் பாரில் சட்டவிரோதமாக "கள்ளமது" (நேரம் கடந்த விற்பனை) விற்கப்படுவதாகவும், அந்த மதுவை அருந்தியதாலேயே சதீஷ் உயிரிழந்துள்ளார் என்றும் அவர்கள் ஆவேசமாகக் குற்றம்சாட்டினர்.

சம்பவம் குறித்து சதீஷின் உறவினர்கள் கூறுகையில், "அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பே பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. தரமற்ற மற்றும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுவை அருந்தியதாலேயே இந்த உயிர் போயுள்ளது. இதற்குப் பொறுப்பான பார் உரிமையாளரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்து போராட்டத்தைத் தொடங்கினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) அண்ணாதுரை தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என உறவினர்கள் பிடிவாதம் பிடித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டிஎஸ்பி அண்ணாதுரை போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உடற்கூறு ஆய்வு முடிவிலேயே தெரியவரும். சட்டவிரோத மது விற்பனை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தார்.

நிலவும் பதற்றம்

இந்தச் சம்பவத்தால் தென்னலக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மதுபான கடை முன்பாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மதுபான கடைகளின் அருகே செயல்படும் பார்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாலிபர் ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் இயற்கை மரணமா அல்லது கள்ளமது பாதிப்பா என்பது குறித்த மருத்துவ அறிக்கைக்காக ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் காத்திருக்கிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
காதல் திருமணம் செய்த சகோதரி.. ஆத்திரத்தில் மச்சானை கத்தியால் குத்திய தம்பி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
Top 10 News Headlines: அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்
அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
Embed widget