மேலும் அறிய

தரங்கம்பாடி அருகே ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்! காரணம் இதுதான்..!

மயிலாடுதுறை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் வாய்க்கால்களில் கவிழந்த விபத்தில் காரில் பயணம் செய்த கும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயர்த்தப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள மகிமலை ஆற்றுக்குள் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சிறு காயங்களுடன் அதிசயமாக உயிர் தப்பிய நிலையில், ஆற்றுக்குள் தலைகீழாகக் கிடக்கும் காரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்வோர் மிகுந்த ஆச்சரியத்துடனும் பரபரப்புடனும் பார்த்துச் செல்கின்றனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த குடும்பம் 

நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது மாலிக் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேருடன் புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு தனது சொகுசு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 10 மணியளவில், கார் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் என்னுமிடத்தில் உள்ள மகிமலை ஆற்றுப் பாலத்தை நெருங்கியது.

அப்பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும் குழியுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றுப் பால வளைவில் போதிய மின் வெளிச்சமும் இல்லாததால், சாலை நிலைமை ஓட்டுநருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் காரணங்களால், முகமது மாலிக் திடீரெனக் காரின் கட்டுப்பாட்டை இழந்தார். கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடிய சொகுசுக் கார், சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில், அருகில் இருந்த மகிமலை ஆற்றுக்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

உடனடி மீட்புப் பணி

கார் ஆற்றுக்குள் விழுந்த பெரும் சத்தம் கேட்டு, அனந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆற்றுக்குள் கவிழ்ந்து கிடந்த சொகுசு காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் கிராம மக்கள் உடனடியாக ஈடுபட்டனர்.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் மகிமலை ஆற்றில் நீரின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாலேயே உள்ளே இருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ஐந்து பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்த கிராம மக்கள், அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை மற்றும் மேல் நடவடிக்கை

பொறையார் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் மற்றும் உடலின் பல பாகங்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, நீரின் அளவு குறைவாக இருந்த காரணத்தால், இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பொதுமக்களின் கோரிக்கையும் அச்சமும்

இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில், ஆற்றுக்குள் கவிழ்ந்து கிடக்கும் பளபளக்கும் சொகுசு காரை அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், அதேசமயம் அச்ச உணர்வுடனும் பார்த்து செல்கின்றனர். சிலர் இந்த காட்சியைத் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்கின்றனர்.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: "இந்த மகிமலை ஆற்றுப்பால வளைவு பகுதியில் சாலை மிக மோசமாக சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. மேலும், வளைவில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாகச் சாலையைச் சீரமைக்க வேண்டும். அத்துடன், பால வளைவில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடரும் சாலைச் சீர்கேடுகளும், கவனக்குறைவும் மேலும் ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தும் முன், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! இந்த 5 நாட்களில் இதைச் செய்யாவிட்டால் சிக்கலா?
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! இந்த 5 நாட்களில் இதைச் செய்யாவிட்டால் சிக்கலா?
அரசு வீடு கிடைக்க ஏற்பாடு... அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி ஆறுதல்: சீர்காழியில் தவெகவினர் நெகிழ்ச்சிப் பணி!
அரசு வீடு கிடைக்க ஏற்பாடு... அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி ஆறுதல்: சீர்காழியில் தவெகவினர் நெகிழ்ச்சிப் பணி!
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை இந்த ஊர்களில் 8 மணி நேரம் பவர் கட்! 
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) :மயிலாடுதுறை மாவட்ட மக்களே அலர்ட்! நாளை இந்த ஊர்களில் 8 மணி நேரம் பவர் கட்! 

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget