மேலும் அறிய

தரங்கம்பாடி அருகே ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்! காரணம் இதுதான்..!

மயிலாடுதுறை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் வாய்க்கால்களில் கவிழந்த விபத்தில் காரில் பயணம் செய்த கும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயர்த்தப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள மகிமலை ஆற்றுக்குள் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சிறு காயங்களுடன் அதிசயமாக உயிர் தப்பிய நிலையில், ஆற்றுக்குள் தலைகீழாகக் கிடக்கும் காரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்வோர் மிகுந்த ஆச்சரியத்துடனும் பரபரப்புடனும் பார்த்துச் செல்கின்றனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த குடும்பம் 

நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது மாலிக் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேருடன் புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு தனது சொகுசு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 10 மணியளவில், கார் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் என்னுமிடத்தில் உள்ள மகிமலை ஆற்றுப் பாலத்தை நெருங்கியது.

அப்பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும் குழியுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றுப் பால வளைவில் போதிய மின் வெளிச்சமும் இல்லாததால், சாலை நிலைமை ஓட்டுநருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் காரணங்களால், முகமது மாலிக் திடீரெனக் காரின் கட்டுப்பாட்டை இழந்தார். கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடிய சொகுசுக் கார், சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில், அருகில் இருந்த மகிமலை ஆற்றுக்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

உடனடி மீட்புப் பணி

கார் ஆற்றுக்குள் விழுந்த பெரும் சத்தம் கேட்டு, அனந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆற்றுக்குள் கவிழ்ந்து கிடந்த சொகுசு காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் கிராம மக்கள் உடனடியாக ஈடுபட்டனர்.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் மகிமலை ஆற்றில் நீரின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாலேயே உள்ளே இருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ஐந்து பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்த கிராம மக்கள், அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை மற்றும் மேல் நடவடிக்கை

பொறையார் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் மற்றும் உடலின் பல பாகங்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, நீரின் அளவு குறைவாக இருந்த காரணத்தால், இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பொதுமக்களின் கோரிக்கையும் அச்சமும்

இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில், ஆற்றுக்குள் கவிழ்ந்து கிடக்கும் பளபளக்கும் சொகுசு காரை அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், அதேசமயம் அச்ச உணர்வுடனும் பார்த்து செல்கின்றனர். சிலர் இந்த காட்சியைத் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்கின்றனர்.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: "இந்த மகிமலை ஆற்றுப்பால வளைவு பகுதியில் சாலை மிக மோசமாக சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. மேலும், வளைவில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாகச் சாலையைச் சீரமைக்க வேண்டும். அத்துடன், பால வளைவில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடரும் சாலைச் சீர்கேடுகளும், கவனக்குறைவும் மேலும் ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தும் முன், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவிகளுக்குக் அந்த விதிமுறை பொருந்தாது..! பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர யாருக்கு என்ன தகுதி தேவை?
மாணவிகளுக்குக் அந்த விதிமுறை பொருந்தாது..! பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர யாருக்கு என்ன தகுதி தேவை?
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவில் யார் யாருக்கு இடம்? ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட லிஸ்ட்!
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவில் யார் யாருக்கு இடம்? ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட லிஸ்ட்!
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget