மேலும் அறிய

தரங்கம்பாடி அருகே ஆற்றில் கவிழ்ந்த சொகுசு கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்! காரணம் இதுதான்..!

மயிலாடுதுறை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் வாய்க்கால்களில் கவிழந்த விபத்தில் காரில் பயணம் செய்த கும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயர்த்தப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள மகிமலை ஆற்றுக்குள் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சிறு காயங்களுடன் அதிசயமாக உயிர் தப்பிய நிலையில், ஆற்றுக்குள் தலைகீழாகக் கிடக்கும் காரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்வோர் மிகுந்த ஆச்சரியத்துடனும் பரபரப்புடனும் பார்த்துச் செல்கின்றனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த குடும்பம் 

நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது மாலிக் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேருடன் புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு தனது சொகுசு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 10 மணியளவில், கார் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் என்னுமிடத்தில் உள்ள மகிமலை ஆற்றுப் பாலத்தை நெருங்கியது.

அப்பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும் குழியுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றுப் பால வளைவில் போதிய மின் வெளிச்சமும் இல்லாததால், சாலை நிலைமை ஓட்டுநருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் காரணங்களால், முகமது மாலிக் திடீரெனக் காரின் கட்டுப்பாட்டை இழந்தார். கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடிய சொகுசுக் கார், சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில், அருகில் இருந்த மகிமலை ஆற்றுக்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

உடனடி மீட்புப் பணி

கார் ஆற்றுக்குள் விழுந்த பெரும் சத்தம் கேட்டு, அனந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆற்றுக்குள் கவிழ்ந்து கிடந்த சொகுசு காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் கிராம மக்கள் உடனடியாக ஈடுபட்டனர்.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் மகிமலை ஆற்றில் நீரின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாலேயே உள்ளே இருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய ஐந்து பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்த கிராம மக்கள், அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை மற்றும் மேல் நடவடிக்கை

பொறையார் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் மற்றும் உடலின் பல பாகங்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, நீரின் அளவு குறைவாக இருந்த காரணத்தால், இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பொதுமக்களின் கோரிக்கையும் அச்சமும்

இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில், ஆற்றுக்குள் கவிழ்ந்து கிடக்கும் பளபளக்கும் சொகுசு காரை அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், அதேசமயம் அச்ச உணர்வுடனும் பார்த்து செல்கின்றனர். சிலர் இந்த காட்சியைத் தங்கள் கைபேசிகளில் பதிவு செய்கின்றனர்.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: "இந்த மகிமலை ஆற்றுப்பால வளைவு பகுதியில் சாலை மிக மோசமாக சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. மேலும், வளைவில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாகச் சாலையைச் சீரமைக்க வேண்டும். அத்துடன், பால வளைவில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடரும் சாலைச் சீர்கேடுகளும், கவனக்குறைவும் மேலும் ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தும் முன், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திங்கட்கிழமை (மார்ச் 30) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் - காரணம் என்ன? முழு விவரம் உள்ளே!
திங்கட்கிழமை (மார்ச் 30) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் - காரணம் என்ன? முழு விவரம் உள்ளே!
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளுக்கான 1,139 EVM இயந்திரங்கள் எங்கே உள்ளது தெரியுமா..? 
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளுக்கான 1,139 EVM இயந்திரங்கள் எங்கே உள்ளது தெரியுமா..? 
மயிலாடுதுறை அருகே பறக்கும் படை சோதனையில் வசமாக சிக்கிய கிஃப்ட் பாக்ஸ்கள்- யாருடையது தெரியுமா..?
மயிலாடுதுறை அருகே பறக்கும் படை சோதனையில் வசமாக சிக்கிய கிஃப்ட் பாக்ஸ்கள்- யாருடையது தெரியுமா..?
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் அதிரும் மயிலாடுதுறை : மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள்..!
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் அதிரும் மயிலாடுதுறை : மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
Top 10 News Headlines: அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
Petrol Diesel Price to Reduce?: குறையும் பெட்ரேல், டீசல் விலை.? கலால் வரியை குறைத்த மத்திய அரசு; டீசலுக்கு முழுமையாக ரத்து
குறையும் பெட்ரேல், டீசல் விலை.? கலால் வரியை குறைத்த மத்திய அரசு; டீசலுக்கு முழுமையாக ரத்து
DMK Alliance: எண்ணிக்கை தான் கிடைக்கல? தொகுதியாச்சும் வருமா? திமுக கூட்டணி எதிர்பார்ப்பு - ஸ்டாலின் அறிவிக்கிறார்
DMK Alliance: எண்ணிக்கை தான் கிடைக்கல? தொகுதியாச்சும் வருமா? திமுக கூட்டணி எதிர்பார்ப்பு - ஸ்டாலின் அறிவிக்கிறார்
Ponraj Apology to TVK: அப்படி வாங்க வழிக்கு; தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
அப்படி வாங்க வழிக்கு; தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
Embed widget