மேலும் அறிய

ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி

வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - இ.பி.எஸ்

2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” - இ.பி.எஸ் பேட்டி .
 
ஏன் விக்கிரவாண்டியில் போட்டியில்லை  - இ.பி.எஸ்., பதில்
 
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானம் மூலம் வந்த எடப்பாடி பழனிசாமி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”அ.தி.மு.க.வுக்கும் ப.சிதம்பரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது, அ.தி.மு.கவில் எடுத்திருக்கக் கூடிய முடிவு. அவருடைய கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.  தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கு தெரியும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல் அடைத்து வைத்து தி.மு.க கொடுமைப்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மாநில அரசுக்கு துணை போனது. இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம் பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருள் கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர். ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அ.தி.மு.கவுக்கு 6000 வாக்குகள் குறைவாகத்தான் கிடைத்தது. விக்கிரவாண்டி எடுக்குறதுக்கு திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள்,பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பார்கள், விக்கிரவாண்டியின் ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. ஆகவேதான் விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை.
 
வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும்
 
2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 38 இடங்களை பிடித்தது. 2021 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது. ஆகவே சட்டமன்றத் தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு.  மக்கள் தேர்தல்களை பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள், 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் நிலக்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த அளவுக்கு மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். 2014 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது, ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை, அதுபோலத்தான் மாறி மாறி வெற்றி தோல்விகள் கிடைக்கும். அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரக் கிடையாது.  வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என கூறினார்
 

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மழலையர் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் நிவாரணம்: மூடல் உத்தரவுக்கு இடைக்கால தடை!
சிவகங்கை மழலையர் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் நிவாரணம்: மூடல் உத்தரவுக்கு இடைக்கால தடை!
பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !
பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !
கொடைக்கானல் ஏரி ஆக்கிரமிப்புகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொடைக்கானல் ஏரி ஆக்கிரமிப்புகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை ஆவணி திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்.. பக்தர்கள் பரவசம் !
மதுரை ஆவணி திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்.. பக்தர்கள் பரவசம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget