மேலும் அறிய

மீனவர் மீது பாட்டில் வீச்சு...நாய் கொலை கைது... புயல் கூண்டு ஏற்றம்... தென் மண்டல முக்கிய செய்திகள்!

மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த இவரது சளி மாதிரி ஒமிக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1. நெல்லையில் பெய்த கனமழை காரணமாக மேலப்பாளையம் கருங்குளத்தில் வயலில் வேலை பார்த்த நடராஜபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி முத்துமாரி (35), மற்றொரு முருகன் மனைவி பாலேஸ்வரி (30) ஆகிய இருவர் இடி தாக்கி பலி, மூதாட்டி வள்ளியம்மாள் (60) பாளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
2. ”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாயை கம்பால் அடித்து  கொன்ற இருவர்  கைது செய்யப்பட்டனர்” - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை.
 
3. சிவகங்கை அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்படுவதால் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
4. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைக்கிராமத்தில்  கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி வந்தனர். அப்போது முகாம் நடைபெறும் இடத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு வந்த பாஜகவினர் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்று கூறி அங்கிருந்த பேனரை அவிழ்த்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மருத்துவர்கள் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கோவிந்தன் மற்றும்  குட்டி என்பவர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
 
5.  மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல், கர்ப்பமடைந்த அவரது வளர்ப்பு நாய் சுஜிக்கு மனிதர்களுக்கு நடத்துவது போலவே வளைகாப்பு நடத்தினார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடை செய்துள்ளது.
 
6. ராமநாதபுரத்தில் கடந்த 3-ம் தேதி திருமணம் செய்ய மறுத்த அக்கா சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியோடி தலைமறைவான  தம்பி 'சரவணக்குமார் என்ற சரண்'  போலீசாரால்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
 
7. தொடர்மழை காரணமாக தேனி அருகே உள்ள போடிமெட்டு மலைச்சாலையில் 10வது முறையாக நேற்றும் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
 
8. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஜவாத்புயலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று மீண்டும் முதலாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
 
9. சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த இவரது சளி மாதிரி ஒமிக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
10. மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, இலங்கை கடற்ப டையினர் பாட்டில்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 10 விசைப்பட குகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசி விரட்டிய சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget