மேலும் அறிய

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.... விரைவில் விமான சேவை

விமான நிலையம் உள்ளூர் வணிகம் மேம்படும் என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கோட்டயம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.... விரைவில் விமான சேவை

 கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மூன்று மாதங்கள் சபரிமலை சீசன் என்பதால் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஜோதியை காணவும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் தனியார் வாகனங்கள் மூலம் வருகை புரிகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தும் சபரிமலையில் விமான நிலையம் இல்லாததால், இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?

இந்நிலையில் சபரிமலையில் சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 2,569 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மணிமலா மற்றும் எரிமேலி தெற்கு கிராமங்களில் இருந்து 1039.876 ஏக்கர் நிலங்கள் கட்டுமான பணிக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமான நிலைய கட்டுமான பணிக்காக மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள் என்றும் 2492 தேக்கு மரங்கள் என்றும் 2247 காட்டு பலாமரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.... விரைவில் விமான சேவை

அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

மேலும் 828 மகோகனி மரங்கள், 1131 பலாமரங்கள் மற்றும் 184 மாமரங்கள் வெட்டப்படும் என்றும் கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படும் என்றும் இருப்பினும் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் 238 குடும்பங்கள் உட்பட 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விமான நிலையம் உள்ளூர் வணிகம் மேம்படும் என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கோட்டயம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
மதுரை ஹோட்டலில் ஒரு ரவா தோசை ரூ.189... மேலும் டிப்ஸ், ஜிஎஸ்டி என வாடிக்கையாளருக்கு பில் ஷாக்!
மதுரை ஹோட்டலில் ஒரு ரவா தோசை ரூ.189... மேலும் டிப்ஸ், ஜிஎஸ்டி என வாடிக்கையாளருக்கு பில் ஷாக்!
சிவகங்கை: சோழபுரத்தில் 13ம் நூற்றாண்டு சிங்க ஆசிரியம் கல்வெட்டு - புதிய வரலாறு!
சிவகங்கை: சோழபுரத்தில் 13ம் நூற்றாண்டு சிங்க ஆசிரியம் கல்வெட்டு - புதிய வரலாறு!
மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!
மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
Embed widget