மேலும் அறிய

ஆசிரியர் மீது பள்ளி மாணவி பாலியல் புகார் - மதுரையில் பரபரப்பு

தலைமையாசிரியர் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளர் பள்ளிகள் இணை இயக்குநர் முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் மீது மாணவி புகார்

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூர்த்தி என்பவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் ஆசிரியர் மூர்த்தி தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் அளித்ததாக அந்தப் மாணவி பரபரப்பு புகார் ஒன்றை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தனது தாய் தந்தை மற்றும் உறவினர்களோடு அளிக்க வந்திருந்தார். அவர் அளித்த புகாரில், ஆசிரியர் மூர்த்தி தான் சொல்வதற்கு இணங்க வேண்டும் எனக்கூறி பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி தெரிவித்தார். மேலும் தன்னிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதோடு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்தார். 
 

ஆசிரியர் மிரட்டல்

இதனால் பள்ளி மாணவி வேதனை அடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் சக மாணவிகள் அவரை காப்பாற்றியதாகவும், இதனையடுத்து மாணவியின் உடன் இருந்த மற்ற மாணவிகள் அவரது தாயாரிடம் இது குறித்து தெரிவித்த நிலையில், மாணவியின் தாய் மகளிடம் விசாரித்த போது நடந்ததை தெரிந்து கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க வந்ததாக குறிப்பிட்டார். ஆசிரியர் மூர்த்தி ஊரில் உள்ள அனைவரும் உறுதுணையாக இருப்பதாகவும், நல்ல ஆசிரியர் என்ற போர்வையில் இருந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர்கள் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் புகார் அளிக்கக்கூடாது என பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
 

தலைமை ஆசிரியர் தகவல்

மாணவி புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியனிடம் கேட்ட போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக மூர்த்தி வேலை பார்த்து வந்தார் எனவும், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததாகவும், மாணவி விவகாரம் தற்போது தான் தனக்கு தெரிய வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தன்னிடம் புகார் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவிகளிடம் விசாரித்துள்ளதாகவும் தற்போது ஆசிரியரை பணி செய்ய வேண்டாம் என கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து இருப்பதாகவும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

கள்ளர் பள்ளி இணை இயக்குனர் முனியசாமி தகவல்.

பள்ளி மாணவி புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமையாசிரியர் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கள்ளர் பள்ளிகள் இணை இயக்குநர் முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget