மேலும் அறிய

ஆசிரியர் மீது பள்ளி மாணவி பாலியல் புகார் - மதுரையில் பரபரப்பு

தலைமையாசிரியர் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளர் பள்ளிகள் இணை இயக்குநர் முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் மீது மாணவி புகார்

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூர்த்தி என்பவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் ஆசிரியர் மூர்த்தி தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் அளித்ததாக அந்தப் மாணவி பரபரப்பு புகார் ஒன்றை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தனது தாய் தந்தை மற்றும் உறவினர்களோடு அளிக்க வந்திருந்தார். அவர் அளித்த புகாரில், ஆசிரியர் மூர்த்தி தான் சொல்வதற்கு இணங்க வேண்டும் எனக்கூறி பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி தெரிவித்தார். மேலும் தன்னிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதோடு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்தார். 
 

ஆசிரியர் மிரட்டல்

இதனால் பள்ளி மாணவி வேதனை அடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் சக மாணவிகள் அவரை காப்பாற்றியதாகவும், இதனையடுத்து மாணவியின் உடன் இருந்த மற்ற மாணவிகள் அவரது தாயாரிடம் இது குறித்து தெரிவித்த நிலையில், மாணவியின் தாய் மகளிடம் விசாரித்த போது நடந்ததை தெரிந்து கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க வந்ததாக குறிப்பிட்டார். ஆசிரியர் மூர்த்தி ஊரில் உள்ள அனைவரும் உறுதுணையாக இருப்பதாகவும், நல்ல ஆசிரியர் என்ற போர்வையில் இருந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர்கள் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் புகார் அளிக்கக்கூடாது என பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
 

தலைமை ஆசிரியர் தகவல்

மாணவி புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியனிடம் கேட்ட போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக மூர்த்தி வேலை பார்த்து வந்தார் எனவும், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததாகவும், மாணவி விவகாரம் தற்போது தான் தனக்கு தெரிய வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தன்னிடம் புகார் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவிகளிடம் விசாரித்துள்ளதாகவும் தற்போது ஆசிரியரை பணி செய்ய வேண்டாம் என கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து இருப்பதாகவும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

கள்ளர் பள்ளி இணை இயக்குனர் முனியசாமி தகவல்.

பள்ளி மாணவி புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமையாசிரியர் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கள்ளர் பள்ளிகள் இணை இயக்குநர் முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
ஒரே அறுவை சிகிச்சையில் புதிய காது: மைக்ரோடியா சிறுவனின் வாழ்வில் மருத்துவனை ஒளி !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
Madurai ; சாலை போடாமல் 30 லட்சத்திற்கு மதிப்பீட்டில் கல்வெட்டு.. கொந்தளித்த உசிலம்பட்டி கிராம மக்கள் !
தமிழக அரசியலில் எம்.எல்.ஏ இடப்பெயர்ச்சி: ஜனநாயகமா, ஆள் பிடிக்கும் அரசியலா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி !
தமிழக அரசியலில் எம்.எல்.ஏ இடப்பெயர்ச்சி: ஜனநாயகமா, ஆள் பிடிக்கும் அரசியலா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி !
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
Embed widget