மேலும் அறிய

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய செய்திகள்..

மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.

1. தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
 
2. நெல்லை கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 18-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 
3. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன் தினம் 7 பேருக்கு கொரோனா தொற்றிய நிலையில் மேலும் 13 பேருக்கு தொற்று பரவியுள்ளது, இதில் மாநகரில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வட்டார அளவில் பாளையம்கோட்டை, ராதாபுரத்தில் தலா 2 பேருக்கும், அம்பையில் ஒருவருக்கும் தொற்று பரவியுள்ளது.
 
4. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் கிராமம். இந்த கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
5. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகு நிலையத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.
 
6. சிவகங்கை மாட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்துவிட்டதால் 16 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஆற்றை ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.
 
7. நெல்லை மாநகராட்சியிலுள்ள 5வது வார்டை பொது பிரிவு வார்டாக  மாற்றக் கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் , நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
 
8. பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை இரண்டு வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தவறும் பட்சத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் நீதிபதிகள் எச்சரிக்கை.
 
9. மோசடி புகாரில் சிக்கிய  தலைமை காவலரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தனர். மேலும் விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.
 
10. ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக பாம்பு, எலிகளுடன் போரட்டத்தில் குதித்த பழங்குடிய மக்கள் 21 பெண்கள் உட்பட 51 நபர்கள் மீது மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget