பயணச்சீட்டுகளை முறைகேடாக பதிவுசெய்த 35 பேர் கைது.. ரூபாய் 4.42 லட்சம் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் பறிமுதல்
மதுரை கோட்டத்தில் அதிக ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக பதிவு செய்த 35 பேர் கைது. ரூபாய் 4.42 லட்சம் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் பறிமுதல்
கொரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து விரைவு ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு பயணச் சீட்டுகள் முழுவதும் விரைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்கள் பயணிகளுக்கு இயல்பாக கிடைக்கவேண்டிய முன்பதிவு பயணச் சீட்டுகளை அதிக அளவில் பதிவு செய்து முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இதை தடுக்க கடந்த மார்ச் மாதம் முழுவதும் மதுரை கோட்டத்தில் பல்வேறு தனியார் நடத்தும் பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு அலுவலர்கள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
மதுரை கோட்டத்தில் அதிக ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக பதிவு செய்த 35 பேர் கைது. ரூபாய் 4.42 லட்சம் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்து இருப்பதாக தெற்கு ரயில்வே தகவல்#railways #Maduraiupdates #news@drmmadurai @MaduraiBus pic.twitter.com/I9eTJ3PjYh
— Thangadurai (@thangadurai887) April 2, 2022

ட்ரெண்டிங் செய்திகள்






















