மேலும் அறிய

துப்பாக்கி உரிமம் கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு; ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

துப்பாக்கி உரிமம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த நெல்லை வருவாய் அலுவலரின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

துப்பாக்கி உரிமம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த நெல்லை வருவாய் அலுவலரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நெல்லை மனோகரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த மனோகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "மனுதாரர் கடந்த 2006 ஜூலை மாதம் துப்பாக்கி வைக்க உரிமம் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் அச்சுறுத்தும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்ததாரராகவும் பஞ்சாயத்து யூனியன் கட்டுமான பணிகளை மேற்கொள்பவராக இருப்பதால், பணம் விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்லும் பொழுது பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரியுள்ளார். மனுதாரரின் தந்தை 90 வயது நிரம்பியவர். 50 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றிருக்கும் நிலையில், இதுவரை அவர் அதனை தவறாக பயன்படுத்தியதில்லை. இந்நிலையில், நெல்லை மாவட்டம் சமூகப் பிரச்சனைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதாலும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மனுதாரருக்கு துப்பாக்கி உரிமம் வழங்க இயலாது எனக் கூறி நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் அவரது மனுவை நிராகரித்துள்ளார்.

மனுதாரர் வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், தன்னிடம் உள்ள பொருட்களை பாதுகாக்கும் நோக்கிலுமே துப்பாக்கி வைக்க உரிமம் கோரியுள்ளார். துப்பாக்கி வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இல்லை. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கோர முடியாது. அதற்கான அவசியத்தை முன் வைக்கலாம். ஆகவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 


மற்றொரு வழக்கு

சவுதி அரேபியாவிற்கு கூலி வேலைக்கு சென்ற தன் கணவன் நிலை என்னவென்று தெரியாததால் கணவனை உயிருடனோ அல்லது  உடலாகவோ மீட்டு ஒப்படைக்க கூறி இளம் மனைவி மனு தாக்கல்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிரிஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு HCB மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவர் சரத்குமார் கடந்த ஜூன் 2022 மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் என்ற ஊருக்கு வேலைக்கு சென்றார். ஆனால் இதுவரை எந்த இது தகவல் தொடர்பும் இல்லை. எனவே எனது கணவரை உயிருடனோ அல்லது உடலாகவோ மீட்டு ஒப்படைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் PN பிரகாஷ் , ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் வழக்கறிஞர் மனுதாரரின் கணவரின் நிலை குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவித்து அவரின் நிலை என்னவென்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்  மனு குறித்து இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய தூதரக அதிகாரி ரியாத்தில் உள்ள சிறைகளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மனுதாரரின் கணவர் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சவுதி அரேபியா அரசால் சட்டப்படி சிறை பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,  மேலும் நீதிமன்ற உத்தரவை   சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மனுதாரரின் கணவரின் நிலை குறித்து அறிவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்த அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியா செய்தி.. புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியா செய்தி.. புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார் !
வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால  திருக்கல்யாண மேடை.. மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது !
வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால  திருக்கல்யாண மேடை.. மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது !
ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி... ஏன் தெரியுமா?
ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி... ஏன் தெரியுமா?
Chithirai Festival ; மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம்.. நாளை கோலாகலமாக திருக்கல்யாணம் !
Chithirai Festival ; மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம்.. நாளை கோலாகலமாக திருக்கல்யாணம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
Tasmac shop closed : 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
Embed widget