மேலும் அறிய

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  விவசாயிகள் மற்றும் கிரிவலப் பாதையில் செல்லுகின்ற பக்தர்கள் தொடந்து  அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேனி வனத்துறையை  மாற்றி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோல் வறட்சியாக இருந்தால் இதை செய்தால் போதும்.. இந்தாங்க நச் டிப்ஸ்!

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி  அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலின்  மலையைச் சுற்றி  கிரிவலப் பாதை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  எனவே அப்பகுதி  விவசாய நிலங்களுக்கு செல்லுகின்ற விவசாயிகளும் மற்றும் கிரிவலப்பாதையில் பொதுமக்களும்  நாள்தோறும் மாலை  நேரங்களில்  கிரிவலம் செல்வது வழக்கம்.  இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி  மாலை கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து  பெரியகுளம்  காவல்துறைக்கு தகவல் தெரிவித்த  நிலையில்  தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார்  மற்றும்  பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சேர்ந்து  கைலாசநாதர் கோவிலின் கிரிவலபாதை பகுதிக்கு பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள் மாலை நேரங்களில் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தினர்.

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

இதனை தொடர்ந்து  தேனி வனச்சரகர்  சாந்தக்குமார் தலைமையிலான வனதுறையினர்  சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில்வனத்துறை வைத்த  கேமராவில் சிறுத்தை நடமாட்டம்  பதிவாகவில்லை, இருந்த போதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் தெரிவித்திருந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் சிறுத்தையை பிடிக்க கடந்த மாதம் 27 ஆம் தேதி இரண்டு கூண்டில்ஆட்டுக்குட்டி கட்டிவைக்கப்பட்டது. கூண்டு வைக்கப்பட்டு 10 நாட்கள் மேலான நிலையில் இன்றுவரை சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட 2 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

 சிறுத்தையை  பிடிக்க வனத்துறையினர் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினர் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கைலாசநாதர் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் அப்பகுதியில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் இடையே தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாற்று முயற்சியில் ஈடுபட்டு சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதேவேளையில், தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வரும் வனத்துறையினர், விரைவில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் படிக்க, 

கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

 

பிறந்த குழந்தையை இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவமனை.. அடக்கம் செய்யும் போது துடித்த இதயம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget