மேலும் அறிய

கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட ஆட்சியர் தகவல் !

”அகழ்வைப்பகம் கட்டுமான பணி டிசம்பருக்குள் முடிவடையும். பொழுதுபோக்கும் வகையில் அருகேயுள்ள கண்மாயின் கரையை பலப்படுத்தி பூமரக்கன்றுகள் நடப்படும்” - என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து முதல் மூன்று  கட்ட அகழாய்வுப் பணி இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது.  நான்கு, ஐந்து, ஆறு, ஏழாம் கட்ட அகழாய்வுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்றது.


கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட  ஆட்சியர் தகவல் !

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்கிய 7 ஆம் கட்ட அகழாய்வில் நான்கு ஊர்களில் அகழாய்வு  பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் மக்கள் வாழ்விடப் பகுதியாக கருதப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்  ஐந்து அடுக்களுக்கு மேல் கொண்ட உறை கிணறு கிடைக்கப்பெற்றது.

Keeladi | சுடுமண் விளையாட்டு பொம்மை, பாசிகள், சங்கு வளையல்கள்.. கீழடியில் மீண்டும் மீண்டும் ஆச்சரியம்

சுடுமண் முத்திரை, முன்னோர்கள் நெசவுக்கு பயன்படுத்திய தக்களி என்னும் ‌நூல் கோர்க்கும் கருவி, பெண்கள் காதில் அணியும் அழகிய வேலைப்பாடுகள் உடைய சுடுமண் காதணிகள், கூர்மையான பென்சில்போல் வடிவம் கொண்ட எலும்பு புள்ளி, சுடுமண்  விளையாட்டு பொம்மை, பாசிகள், சுடுமண் ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆறு அடுக்கு கொண்ட ஒரு உறை கிணறு கிடைத்துள்ளன.


கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட  ஆட்சியர் தகவல் !

இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவற்றின் பயன்பாடுகள், காலம் குறித்து ஆராய்ச்சிக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். மேலும் கீழடி, அகரம், மணலூர், மற்றும் கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில் மணலூரில் பொருட்கள் கிடைக்கவில்லை என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட  ஆட்சியர் தகவல் !

இந்நிலையில் கீழடி உள்ளிட்ட நான்கு இடத்தில்  தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 2 ஏக்கரில் 12.21 கோடியில் சர்வதேச தரத்தில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இப்பணி வருகிற அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆனால் கொரோனா, தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடித்தளம் அமைக்கும் பணி கூட முடியாமல் இருந்தது.

கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட  ஆட்சியர் தகவல் !
 
இதுதொடர்பான புகாரையடுத்து கடந்த ஜூனில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அகழ்வைப்பக கட்டுமான பணியை பார்வையிட்டு குறித்த காலத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட  ஆட்சியர் தகவல் !
 
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...,”அகழ்வைப்பகம் கட்டுமான பணி டிசம்பருக்குள் முடிவடையும். அகழ்வைப்பகம் வளாகத்தில் உள்ள பனைமரங்களை வெட்டாமல் அப்படியே விடப்படும். மேலும் இங்கு வரும் பார்வையாளர்கள் பொழுதுபோக்கும் வகையில் அருகேயுள்ள கண்மாயின் கரையை பலப்படுத்தி பூ மரக்கன்றுகள் நடப்படும். அவர்கள் தங்குவதற்கு கரையில் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்படும், என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget