மேலும் அறிய

கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் ஏற்பட்டு தொழிலாளி இறந்ததாக கூறி மண் எடுத்து வர சென்னவரின் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்.

வேடசந்தூர் அருகே கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் ஏற்பட்டு தொழிலாளி இறந்ததாக கூறி மண் எடுத்து வர சொன்னவரின் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Most 200+ score in IPL: ஐபிஎல்-லில் அதிக முறை 200 ரன்கள்.. அடுத்தடுத்து சாதனையை குவிக்கும் சிஎஸ்கே.. முழு பட்டியல் விவரம்!
கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள பாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்திவேல்(வயது 33). சக்திவேலின் உறவினர் கருஞ்சின்னூரைச் சேர்ந்த முருகன். இவர் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ராஜமோகன் என்பவருடைய ஆதரவாளர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமோகனின் தூண்டுதலின் பேரில் முருகன், சக்திவேலிடம் அய்யலூரில் உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி விசாரணை குழுவில் இடம்.. அறிவித்த கலாஷேத்ரா அறக்கட்டளை..!
கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

அதனைத்தொடர்ந்து சக்திவேல், வண்டி கருப்பணசாமி கோவிலில் இருந்து பிடி மண்ணை எடுத்து வந்து முருகனிடம் கொடுத்துள்ளார். அப்போது முதல் சக்திவேலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி  நேற்று  உயிரிழந்தார்.

Influenza : சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் அச்சுறுத்தல்: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வந்தால் இப்படியா? உஷார்

வண்டி கருப்பண சாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததால் தெய்வ குத்தம் ஆகிவிட்டது, சாமி தண்டித்து விட்டது. அதனால் தான் சக்திவேல் உயிரிழந்தார் என்று கூறி அவரது உறவினர்கள் சக்திவேலின் உடலை எடுத்துச் சென்று கருஞ்சின்னானூரில் உள்ள முருகன் வீட்டின் முன்னால் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.


கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

அப்போது கோவில் பிடிமனை எடுத்து வர சொல்லிய முருகன் மற்றும் ராஜமோகன், சம்பவம் இடத்திற்கு வர வேண்டும், மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை இறந்தவரின் உடலை எடுக்க மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget