மேலும் அறிய

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !

போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் – நான்கு நாட்களாக நடைபெறும் போராட்டம்: வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை தோல்வி.

சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
 
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 5 - ஆம் தேதி முன்தினம் இருவரக இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி காலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரலாம் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் குழுவினர் மானாமதுரைக்கு வந்தனர். இந்த வழக்கறிஞர் குழுவில் சாமிதுரை, மயில்வாகனம் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
ஆனால் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து போராட்டக் குழுவினர், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முக்கிய குறிப்பு

மானாமதுரை ஆகாஷ் மரண விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் “காவல்துறையினர்  காலை உடைத்தனர். கீழே விழுந்ததாக கூறுமாறு மிரட்டியதால் அவ்வாறு சொன்னேன்” - என ஆகாஷின் வாக்குமூலம் தெரிவித்தது தெரியவந்தது. ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது SC STபிரிவின் கீழ் வழக்கு மாற்றம் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது. பிரதமர், முதல்வர் வருகைக்காக போக்குவரத்து பாதை மாற்றப்படுகையில், பொதுமக்களுக்காக செய்யலாமே?- நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் குழுவை அமைத்து, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரவும் மதுரை அமர்வு உத்தரவிட்டது. போராட்டக்காரர்கள் மறுத்தால் நீதிமன்றமே அகற்ற உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

தலைப்பு செய்திகள்

”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Maruti Suzuki: பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
Gold rate today : ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
Embed widget