மேலும் அறிய

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !

போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் – நான்கு நாட்களாக நடைபெறும் போராட்டம்: வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை தோல்வி.

சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
 
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 5 - ஆம் தேதி முன்தினம் இருவரக இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி காலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரலாம் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் குழுவினர் மானாமதுரைக்கு வந்தனர். இந்த வழக்கறிஞர் குழுவில் சாமிதுரை, மயில்வாகனம் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
ஆனால் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து போராட்டக் குழுவினர், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முக்கிய குறிப்பு

மானாமதுரை ஆகாஷ் மரண விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் “காவல்துறையினர்  காலை உடைத்தனர். கீழே விழுந்ததாக கூறுமாறு மிரட்டியதால் அவ்வாறு சொன்னேன்” - என ஆகாஷின் வாக்குமூலம் தெரிவித்தது தெரியவந்தது. ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது SC STபிரிவின் கீழ் வழக்கு மாற்றம் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது. பிரதமர், முதல்வர் வருகைக்காக போக்குவரத்து பாதை மாற்றப்படுகையில், பொதுமக்களுக்காக செய்யலாமே?- நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் குழுவை அமைத்து, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரவும் மதுரை அமர்வு உத்தரவிட்டது. போராட்டக்காரர்கள் மறுத்தால் நீதிமன்றமே அகற்ற உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget