மேலும் அறிய

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !

போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் – நான்கு நாட்களாக நடைபெறும் போராட்டம்: வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை தோல்வி.

சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
 
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 5 - ஆம் தேதி முன்தினம் இருவரக இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி காலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரலாம் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் குழுவினர் மானாமதுரைக்கு வந்தனர். இந்த வழக்கறிஞர் குழுவில் சாமிதுரை, மயில்வாகனம் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
ஆனால் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து போராட்டக் குழுவினர், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முக்கிய குறிப்பு

மானாமதுரை ஆகாஷ் மரண விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் “காவல்துறையினர்  காலை உடைத்தனர். கீழே விழுந்ததாக கூறுமாறு மிரட்டியதால் அவ்வாறு சொன்னேன்” - என ஆகாஷின் வாக்குமூலம் தெரிவித்தது தெரியவந்தது. ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது SC STபிரிவின் கீழ் வழக்கு மாற்றம் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது. பிரதமர், முதல்வர் வருகைக்காக போக்குவரத்து பாதை மாற்றப்படுகையில், பொதுமக்களுக்காக செய்யலாமே?- நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் குழுவை அமைத்து, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரவும் மதுரை அமர்வு உத்தரவிட்டது. போராட்டக்காரர்கள் மறுத்தால் நீதிமன்றமே அகற்ற உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Sundar C: எதிரெதிர் கட்சி.. நமக்கு செட்டாகாது.. கமல் -ரஜினி படத்தில் சுந்தர்.சி விலக காரணம் இதுதானா?
Sundar C: எதிரெதிர் கட்சி.. நமக்கு செட்டாகாது.. கமல் -ரஜினி படத்தில் சுந்தர்.சி விலக காரணம் இதுதானா?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Embed widget