மேலும் அறிய

மதுரை : டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நிறைவு.. குற்றம்சாட்டிய மாணவி

வினாத்தாள் எண் மற்றும் பதிவெண் குளறுபடி காரணமாக காலை 10.45 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணிவரையிலும் , மதியம் 2.45 முதல் 5.45 மணிவரை குருப் 2ஏ தேர்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு பதிவெண் மற்றும் வினாத்தாள் குளறுபடி - தாமதமாக தொடங்கிய குருப் 2  தேர்வு வினாத்தாள்கள் ஏற்கனவே நிரப்பியிருந்ததால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தேர்வு என்ற பெயரில் குளறுபடி நடைபெறுவதாக கூறி அழுது தவித்த மாணவி.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பிரிவுகளில்,  முதன்மைத் தேர்வினை மதுரை மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 6750 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.  இந்நிலையில் வினாத்தாள் மற்றும் பதிவெண்கள் குளறுபடி காரணமாக காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது காலை 10.45 மணிக்கு தொடங்கியது. தமிழ் கட்டாய தகுதி தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறுகிறது. அதன் பின்னர் மதியம் 2 .45 மணி முதல் 5.45 மணி வரை பொது அறிவுக்கான தேர்வு நடைபெற்றது.


மதுரை : டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நிறைவு.. குற்றம்சாட்டிய மாணவி

 
இந்த நிலையில் மதுரை அவுட் போஸ்ட் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தேர்வு மையத்தின் தேர்வு எழுத வந்தவர்களுக்கு காலை 9.30மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன அப்போது ஏராளமான தேர்வுகள் வினாத்தாள்களை பதிலை எழுத ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் வினாத்தாள்கள் மற்றும் பதிவெண் மாறி இருப்பதாக கூறி குழப்பம் ஏற்பட்ட நிலையில் தேர்வு நிறுத்தப்பட்டது. அப்பொழுது 45 நிமிடத்திற்கு மேலாக தாமதமான நிலையில் தேர்வர்கள் சிலர் வெளியில் வந்து புத்தகம் மற்றும் செல்போன்களை பார்த்து வினாக்கள்களை நிரப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து வினாத்தாள்களில் அவரவர்களிடம் கொடுக்கப்பட்ட வினாத்தாள்களில் அவர்களது பதிவு எண்களை எழுதிவிட்டு தேர்வை எழுதுமாறு அறிவுறுத்தினர்.

மதுரை : டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நிறைவு.. குற்றம்சாட்டிய மாணவி
 
இதனையடுத்து காலை 10:45 மணிக்கு தேர்வு தொடங்கியது ஆனால் ஒரு சில தேர்வுகளுக்கு வந்திருந்த வினாத்தாள்களில் ஏற்கனவே பதிவு எண் தேர்வர்களின் கையெழுத்து மற்றும் வினாத்தாள்களுக்கான பதில்களும் நிரப்பப்பட்டு இருந்தன என சொல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தேர்வை புறக்கணித்து வெளியில் வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கான வினாத்தாளில் ஏற்கனவே பதில் எழுதப்பட்டுள்ளதாகவும் அதே போன்று பதில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை அடித்துவிட்டு மீண்டும் பதில் எழுதுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எழுதினால் மைனஸ் மார்க் வந்துவிடும் இதேபோன்று 45 நிமிட தாமதத்தால் தேர்வர்கள் புத்தகத்தைப் பார்த்து வினாத்தாள்களை நிரப்பிவிட்டதாகவும் இதனால் இந்த தகுதி தேர்வு தங்களுடைய மதிப்பெண் குறைந்து வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என வேதனை தெரிவித்தனர். பல ஆண்டுகளாக படித்து காத்திருந்து எழுதிய தேர்வில் இதுபோன்ற குளறுபடிகளால் நாங்கள் தவித்து நிற்பதாகவும் இதற்கு யார் பதில் சொல்வார்கள் எனவும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகளை எழுதத் தொடங்கினர். தாமதமாக தேர்வு எழுதிய 10 தேர்வர்களுக்கு மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது இதே போன்று மதியம் பொது தேர்வுக்கான தேர்வு 2.45 மணிக்கு தொடங்கியது.

மதுரை : டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நிறைவு.. குற்றம்சாட்டிய மாணவி
 
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றால் தங்களுக்கு அரசு பணி கிடைக்கும் என எதிர்பார்ப்போடு பல ஆண்டுகளாக படித்து தேர்வு எழுதி வரும் பட்டதாரிகள் இதுபோன்ற அதிகாரிகளின் தவறுகளால் தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும் எனவும் இனிமேல் இதுபோன்ற காலி பணியிடங்களும் அறிவிப்புகளும் குரூப் 2-வில் வருவதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகும் எனவும் வேதனை தெரிவித்தனர்.
 
டி.என்.பி.எஸ்.சி  சார்பில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வு முடிவுபெற்றது.  மதுரை மாவட்டத்தில் தேர்வுக்காக விண்ணப்பித்த 6718 தேர்வர்களில் காலையில் நடைபெற்ற குருப் 2 தேர்வினை 92 % பேர் 6200தேர்வர்களும், குருப் 2 ஏ தேர்வினை 94% பேர் 6319 தேர்வர்களும் தேர்வு எழுதியுள்ளனர் 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!
ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவு: திமுக-வில் இணைந்த பின், அதிமுக-வில் படையெடுக்கும் ஆதரவாளர்கள்! தேனியில் பரபரப்பு!
திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget