![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
2வது மனைவியால் குழந்தையை பார்க்க வராத தந்தை - செருப்பு மாலை போட்டு கட்டிவைத்து அடித்த மனைவி
தெலுங்கானா அருகே இரண்டாவது திருமணம் செய்த கணவரை முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![2வது மனைவியால் குழந்தையை பார்க்க வராத தந்தை - செருப்பு மாலை போட்டு கட்டிவைத்து அடித்த மனைவி Telangana: wife tied her husband to an electric pole and beat him up and garlanded sandals 2வது மனைவியால் குழந்தையை பார்க்க வராத தந்தை - செருப்பு மாலை போட்டு கட்டிவைத்து அடித்த மனைவி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/18/3523c7b06942def140fb1d4ec80863621663501551676175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலுங்கானா அருகே இரண்டாவது திருமணம் செய்த கணவரை முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம், மாந்தனி மண்டலம் ஸ்வர்ணப்பள்ளியைச் சேர்ந்த தம்பதியினர் ராமசாமி மற்றும் பத்மா. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன், இரண்டாவது மகள் அகிலாவுக்கும், ஹன்மகொண்டாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டிக்கும் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்காக ராமசாமி தனது சொந்த நிலத்தை விற்று ஸ்ரீகாந்துக்கு வரதட்சணையாக 20 லட்சம் கொடுத்துள்ளார். திருமணமாகி ஐந்து மாதத்தில் அகிலா கர்ப்பமானாள். இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த நாள்முதல் ஸ்ரீகாந்த் தன் மனைவியை அழைத்துச் செல்ல மறந்துவிட்டார்.
இப்படியே அந்தக் குழந்தைக்கும் தினமும் மூன்று வயதாகியுள்ளது. இத்தனை நாட்களாக ஸ்ரீகாந்த் தன் மனைவியையோ, மகனையோ பார்க்க வரவில்லை. ஆனால் தினந்தோறும் அகிலாவிற்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த அகிலா ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது ஸ்ரீகாந்த் தனது உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மற்ற பெண்களுடன் திருமணத்திற்கு புறம்பான உறவை நடத்தி வரும் ஸ்ரீகாந்த், இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் தான் இதுவரை உன்னை கவனிக்காமல் தொல்லை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அகிலா, இந்த விஷயம் ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக ஸ்ரீகாந்த் ஸ்வர்ணபள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை ஓட விடாமல் மின்கம்பத்தில் கட்டி வைத்து அகிலாவிடம் ஒப்படைத்தனர். மூன்று வருடங்களாக தன்னையும் தன் குழந்தையையும் துன்புறுத்திய கணவன் மீது அகிலா தன் கோபத்தை எல்லாம் காட்டினாள். வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கணவன் திருமணமாகி சில காலம் பிரிந்துவிட்டார். மகன் பிறந்ததைக் காண வரவில்லை. தன்னைப் போன்ற வாழ்க்கை மற்ற பெண்களுக்கு இருக்கக் கூடாது என்று எல்லோர் முன்னிலையிலும் தன் கணவனை செருப்புமாலை அணிவித்து தண்டித்தார். இதுபற்றி தகவல் அறிந்த மாந்தானி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீகாந்தை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)