மேலும் அறிய

"காதலெனும் தேர்வெழுதி" காதலிக்காக பெண் வேடமிட்டு தேர்வு எழுதிய காதலன் - சிக்கியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக அவரைப் போன்று பெண் வேடமிட்டு தேர்வு எழுதச்சென்று பிடிபட்டுள்ளார்.

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக அவரைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதச்சென்று பிடிப்பட்டுள்ளார். 

உண்மையாக காதலிப்பவர்கள் தனது காதலிக்காகவும், காதலனுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பலரும் கூறுவர். இருப்பினும், இந்த காலத்தில் அப்படி செய்வது அரிவது என்றும் பலரும் கூறுவார்கள். சில நேரங்களில் காதலுக்காகவும், காதலிப்பவர்களுக்காகவும் சில விபரீதமான செயல்களையும் சிலர் செய்வார்கள். ஆனால், அப்படி பேசுபவர்களை வாய் அடைக்க செய்தது ஒரு இளைஞரின் செயல். 

காதலிக்காக தேர்வு எழுதி சென்ற இளைஞர்:

பஞ்சாப் மாநிலம் கோட்காபூரா பகுதியைச் சேர்ந்தவர் பெண் பரம்ஜித் கௌர் (26). பட்டப்படிப்பை முடிந்த இவர், அரசு பணிகளுக்காக தேர்வு எழுதி வருகிறார்.  ஆனால், இவர் எழுதிய தேர்வில் எதிலும்  இவர் தேர்ச்சி பெற்றதில்லை.  

இதுகுறித்து தனது காதலான அன்கிரீஸ் சிங்கிடமும் பலமுறை கூறி வருத்தப்பட்டு உள்ளார்.  இந்த மன வருத்தத்தை போக்க தான் உனக்கு பதிலாக நான் தேர்வு எழுதுகிறேன் என்று காதலன் அன்கிரீஸ் சிங் (31) கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சுகாதார பணியாளர்கள்  தேர்வுக்காக 2 மாதங்களாக தீவிரமாக படித்து வந்தார் அன்கிரீஸ் சிங்.

அன்கிரீஸ் சிங் தனக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிடுவான் என்ற தையரியத்தில் பெண் பரம்ஜித் கௌரும் இருந்து வந்துள்ளார்.

காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்:

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி டிஏவி பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்றது. அப்போது, சுடிதார், லிப்ஸ்டிக், ஒட்டுமுடி, பொட்டு, கண்மை என தன்னை ஒரு பெண் போலவே மாற்றிக் கொண்டு  தேர்வு மையத்துக்கு சென்றார் அன்கிரீஸ் சிங். மேலும், தனது நடை மற்றும் முக பாவனைகளை பெண் போலவே மாற்றிக் கொண்டார்.

அவரை பார்த்து யாருக்கும் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தன்னை ஒரு பெண் போல் காட்டினார். பின்னர், அனைவரையும் சோதனையிட்ட அதிகாரிகள் செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையில் புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்தன. தனது ஒரிஜினல் புகைப்படத்தில் இருந்த மீசையை போட்டோஷாப் கொண்டு மறைத்து தலை முடியையும் வளர்த்து வைத்திருந்தார்.

இதை பார்த்த சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பயோ மெட்ரிக் கருவி மூலம் அவரது விரலை அதில் வைக்க செய்தனர். அப்போது, அன்கிரீஸ் சிங்கின் பெண் போல வேடமிட்டு வந்திருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பரம்ஜித் கௌரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் - பீகாரில் என்ன நடந்தது?

Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget