மேலும் அறிய

Parliament Winter Session: தொடர்ந்து அமளி: நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளைவரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளைவரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 தேதி தொடங்கியது. அன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ஒருநாள் முன்னதாக முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் முடங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கே நிலவி வருகிறது. மாநிலங்களை எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய பூதாகரத்தை உண்டு பண்ணியுள்ளது. 

இந்நிலையில்தான் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் பிரைன் மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவையின் மாண்பை மீறும் வகையில் நடந்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 12 பேர் இப்போது ஒருவர் என்பதால் மோதல் அதிகரிக்கூடிய சூழலே நிலவி வந்தது. இதனால் இன்று எந்த அவை நடவடிக்கைகளும் நடைபெறாது என்று நினைத்த மத்திய அரசு கூட்டத்தொடரை ஒருநாள் முன்னதாகவே முடித்து கொண்டுள்ளது. 

காலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மக்களவைக்கு வந்தனர். அப்போது 18 மணிநேரம் வீணானது எனக்கூறி அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தார். லக்கிம் பூர் கேரி வன்முறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிருந்தனர். இதனால் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே கடுமையான மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில்தான் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 

ஏற்கெனவே ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், பெண்ணின் திருமண வயது 21 ஆக அதிகரிக்கும் மசோதா மீதான விவாதம் முடிவுபெற்று நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு கூடுதல் செலவினங்களுக்காக அரசு தாக்கல் செய்திருந்த மசோதா மக்களவையின் ஒப்புதலை பெற்றுவிட்டது. வேறு எந்த அவசர மசோதாவும் நிலுவையில் இல்லை. இதன்காரணமாகவும் எதிர்க்கட்சிகள் வேறு அலுவல் வேலைகளை பார்க்க விடாது எண்ணியும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் வாசிக்க: ஒமிக்ரான் வைரஸ் - வருகிறதா ஊரடங்கு.... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்வது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget