மேலும் அறிய

கோவை மாணவி கொடூர கொலை - காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

நகை, பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் மாணவியை கொலை செய்து விட்டு, வேறொரு நபருடன் உடன் சென்றதாக நாடகமாட திட்டமிட்டது தெரியவந்தது

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதியன்று பள்ளி விடுமுறை என்பதால் அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாயார் மாலை வந்து பார்த்த போது, அச்சிறுமி வீட்டில் இல்லை என்பது தெரிந்தது. பின்னர் சிறுமியின் செல்போனுக்கு அவர் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போது, சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அன்று காலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.


கோவை மாணவி கொடூர கொலை - காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

இதனை தொடர்ந்து தனது மகளை காணவில்லை என அவரது தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதர் ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக துப்புரவு பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் பணியாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், மூட்டையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில் அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கில் அவரது குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை மாணவி கொடூர கொலை - காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் துணை ஆணையாளர் உமா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மாணவி கடந்த 11 ஆம் தேதி காணாமல் போனது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மாணவி சடலமாக அவர் வசிக்கும் பகுதியில் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில், மூட்டையில் கட்டிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து புலன் விசாரணை செய்த போது, அந்த பெண்ணின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவர் கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவியின் தாயாருக்கும், முத்துக்குமாருக்கும் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்த நகை, பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் மாணவியை கொலை செய்து விட்டு, வேறொரு நபருடன் உடன் சென்றதாக நாடகமாட திட்டமிட்டது தெரியவந்தது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் அது தெரியவரும். முத்துக்குமாரிடம் இருந்து நான்கே கால் பவுண் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 44 வயதான முத்துக்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. முத்துக்குமார் மீது ஆதாயக்கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தேர்தல் வீரனாக அவதாரம் எடுத்த இருவாச்சி பறை – கோவை Election Icon வெளியீடு...
தேர்தல் வீரனாக அவதாரம் எடுத்த இருவாச்சி பறை – கோவை Election Icon வெளியீடு...
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்துடன் வெளியேறிய மக்கள்...
கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்துடன் வெளியேறிய மக்கள்...
வேலை நிறுத்தம் தொடரும் – கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு
வேலை நிறுத்தம் தொடரும் – கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
TN Election 2026: பில்லு குறையில, கடன் கரையில, லைவ் தெரியில - சூரியனால் இலைக்கு ஜாக்பாட்? நட்டாத்தில் நாயகன்
TN Election 2026: பில்லு குறையில, கடன் கரையில, லைவ் தெரியில - சூரியனால் இலைக்கு ஜாக்பாட்? நட்டாத்தில் நாயகன்
IND Vs ZIM: அரையிறுதி வாய்ப்பு.. இந்திய அணி தக்கவைக்குமா? ஜிம்பாப்வே உடன் மோதல் - தெ.ஆப்., ஜெயிக்கணும்..
IND Vs ZIM: அரையிறுதி வாய்ப்பு.. இந்திய அணி தக்கவைக்குமா? ஜிம்பாப்வே உடன் மோதல் - தெ.ஆப்., ஜெயிக்கணும்..
Thiruvanmiyur to Uthandi flyover : திருவான்மியூர் டூ உத்தண்டி வெறும் 10 நிமிடம் தான்.! ரூ.2100 கோடியில் மேம்பாலம்- இவ்வளவு சிறப்பம்சமா.?
திருவான்மியூர் டூ உத்தண்டி வெறும் 10 நிமிடம் தான்.! ரூ.2100 கோடியில் மேம்பாலம்- இவ்வளவு சிறப்பம்சமா.?
Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?
Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
Embed widget