மேலும் அறிய

அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!

"பாறு கழுகுகள் அழிவிற்கு மனித தவறுகளும், மூட நம்பிக்கையும் முக்கிய காரணம். பிணம் தின்பவை என்பதால் அப்பறவைகளை இழிவாக கருதும் நிலையால், பாறு கழுகுகளின் அழிவை பெரிதாக கண்டு கொள்வதில்லை"

காடுகளில் உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழ்பவை பிணந்திண்ணி கழுகுகள் என அழைக்கப்படும் பாறு கழுகுகள். இறந்த உடல்களை உண்டு நோய் பரப்பும் நுண்ணுயிர்கள் பரவாமல் தடுப்பதில் பாறு கழுகுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. இவற்றில் வெண்முதுகுப்பாறு, கருங்கழுத்துப்பாறு, செந்தலைபாறு, மஞ்சள்முகப்பாறு ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அழியும் தருவாயில் உள்ளன. தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள், தற்போது தமிழ்நாட்டின் நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், கேரளா, மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. 

 

அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!
பாறு கழுகு, புகைப்படம் : பைஜூ

பாறு கழுகுகள் அழிவிற்கு மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகள், வன விலங்குகளுக்கு விஷம் வைத்தல், இறந்த உடல்களை புதைப்பதால் ஏற்படும் இரை தட்டுப்பாடு, வாழிட சூழல் குறைவு உள்ளிட்டவை காரணம் என்றாலும், மனித தவறுகளே அவை அழிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகளை விழிப்புணர்வு மூலம் மீட்டெடுக்கும் பணிகளை செய்து வருகிறது அருளகம் என்ற தன்னார்வ அமைப்பு. 



அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!

இது குறித்து அருளகம் அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் கூறுகையில், “இயற்கை பாதுகாப்பை முதன்மையான நோக்கமாக கொண்டு 20 ஆண்டுகளாக அருளகம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. மரபார்ந்த விதை சேகரிப்பு, நாட்டு தாவரங்கள் பாதுகாப்பு, மூட நம்பிக்கையால் அழிக்கப்படும் பச்சோந்தி, பாறை எலி, முள் எலி உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணி செய்து வருகிறோம். அதிலும் பாறு கழுகுகள் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு சத்தியமங்கலம், முதுமலை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் 82 கிராமங்களில் பணி செய்து வருகிறோம்.


அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!

காட்டில் உயிரிழக்கும் உயிரினங்களை உட்கொண்டு சுத்தப்படுத்தும் வேலைகளை பாறு கழுகுகள் செய்து வருகின்றன. அழுகிப் போன இறைச்சியை உட்கொண்டாலும் அவற்றிக்கு எதுவும் ஆகாது. நோய் கிருமிகள் மற்ற விலங்குகளுக்கு பரவுவதை தடுக்க பாறு கழுகுகள் இருத்தல் அவசியம். அதேபோல நோய் கிருமிகளால் மனிதர்கள் பாதிக்கப்படுவதையும் தடுத்து வருகிறது. வெண் முதுகு பாறு கழுகுகள் சுமார் 150 என்ற எண்ணிக்கையில் காணப்படுகிறது. மற்றவை 20 க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. பாறு கழுகுகள் அழிவிற்கு மனித தவறுகளும், மூட நம்பிக்கையும் முக்கிய காரணம். பாறு கழுகுகளை அபச குணமாக பார்க்கும் நிலை உள்ளது.  பிணம் தின்பவை என்பதால் அப்பறவைகளை இழிவாக கருதும் நிலையால், பாறு கழுகுகளின் அழிவை பெரிதாக கண்டு கொள்வதில்லை. 

அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!
பாறு கழுகு, புகைப்படம் : பைஜூ

மாடுகளுக்கு பயன்படுத்தும் 2 வலி நிவாரணி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதனை முன் மாதிரியாக கொண்டு இந்தியா அளவில் அந்த மருந்துகளுக்கு தடை விதிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நீலகிரியில் பாறு கழுகுகளை பாதுகாத்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க இனப்பெருக்க மையம் அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது முறையாக ஆரம்பித்தால், பாறு கழுகுகளை மீட்க உதவியாக இருக்கும்.


அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!

வனத்தை ஒட்டிய கிராமங்களில் விலங்குகள் மீதான எதிர்ப்புணர்வை குறைக்கும் வகையில் பந்திப்பூர் மாரியம்மா டிரஸ்ட் மூலம் புலி தாக்கி உயிரிழக்கும் கால்நடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்று தருகிறோம். அரசு வழங்கும் இழப்பீடு கிடைக்க கால தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்கி வருகிறோம். பாறு கழுகுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாயாரில் ஒரு காட்சிக் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.


அழிந்து கொண்டிருக்கும் பாறு கழுகுகளை மீட்கும் அரும் பணியில் ஈடுபட்டுள்ள அருளகம் அமைப்பு..!

பாறு கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படும். பாறு கழுகுகளை மீட்டெடுப்பது என்பதை வனத்துறையினரால் மட்டுமே செய்து விட முடியாது. அவை வாழ்வதற்கான உகந்த சூழலை உருவாக்க அனைவரது பங்களிப்பும் முக்கியம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
Embed widget