மேலும் அறிய

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!

ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது.

 
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற, அதன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், வேடர்கள் அணியின் மூளையாக இருந்து, முதல் ஜூரியாக வெளியேறிய நந்தா, தனது அனுபவத்தை இணையதளத்திற்கு பகிர்ந்துள்ளார். இதோ அவரது அந்த பேட்டி...
 

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
‛‛போட்டி தொடங்கியதும்ல வேடர்கள் தான் முதலில் தொடர்ந்து ஜெயித்தோம். விளையாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில், பெசண்ட் ரவி, லட்சுமி ப்ரியா, அம்ஜத் ஆகியோர் அப்போது உறுதியாக இருந்தனர். எங்க அணியில் இருந்து, நாங்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. ரவி, அவராக தான் உடல்நிலை காரணமாக வெளியே செல்ல விரும்பினார்.
ரவி வெளியேறியதை பற்றி அர்ஜூன் சார் என்னிடம் கேட்டார். ‛அவர் சென்றது எனக்கு பெரிய இழப்பு சார்... அவர் சென்றது ஆயிரம் யானை பலம் இழந்ததைப் போல உள்ளது சார்,’ என அர்ஜூன் சாரிடம் நான் கூறினேன். ஆனால் அது ஒளிபரப்பாகவில்லை. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை.
சரண், எங்கள் அணிக்கு வரும் போது, முதலில் என்னால் ஏற்க முடியவில்லை. சந்தர்ப்பம், சூழல் தான் தவறு செய்ய வைத்திருக்கிறது. அதை அவர் உணர்ந்த போது, அதை நான் ஏற்றுக்கொண்டேன். அரவணைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அணிக்கு அவர் அர்ப்பணித்ததால், நெருக்கம் ஏற்பட்டது. ட்ரைபிள் பஞ்சாயத்தில், ஐஸ்வர்யாவும், சரணும் ஒன்றாக வெளியேறிய போது, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின்னர் நானும் அவர்கள் இருக்கும் மூன்றாம் உலகத்திற்கு சென்றேன். அங்கு இருந்த நாட்கள், எங்கள் 3 பேருக்கும் நல்ல நெருக்கம் கிடைத்தது. ஐஸ்வர்யா மீண்டும் போட்டிக்கு சென்ற பின், நானும் சரணும் ஒருவாரம் தனியாக இருந்தோம். அப்போது, சரணுடன் இன்னும் நெருக்கம் ஆனது. 

‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
அதன் பின் நான் ஜூரியாக வெளியேறிய பின், ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு போன போது, ஐஸ்வர்யாவும், சரணும் என்னை பார்க்கவே இல்லை. அப்போது தான், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போனது தெரிந்தது. அதன் பின் ஐஸ்வர்யா வெளியேறி வந்து விபரங்களை கூறினார்.  அப்போது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் அதை வைத்து சரணுக்கு நான் ஓட்டளித்தேன். சரணுக்காக ஐஸ்வர்யா அவ்வளவு சப்போர்ட் செய்தார். அவர் தவறே செய்திருந்தாலும், அவரை சரண் விட்டுக் கொடுத்திருக்க கூடாது. 
உமாபதி-விஜயலட்சுமி இடையே என்ன நடந்தது என எனக்கு தெரியாது. உமாபதி, நல்ல பிளேயர். அவர் ஜெயித்திருக்கலாம். நல்ல மனநிலையில் அவர் பைனலில் விளையாடவில்லை. டாப் 3ல் அவர் வந்திருந்தால், போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும். காடர்கள் அணிக்கு உமாபதி தான் பில்லர். அவர் இல்லையென்றால், அவர்களின் வெற்றி சாத்தியம் இல்லை. ஒருவேளை உமாபதி இருந்திருந்தால், அவருக்கு தான் நான் ஓட்டளித்திருப்பேன்,’’ என, நந்தா அந்த பேட்டியில் கூறியுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget