மேலும் அறிய

பல்லாவரம் டூ தென் இந்தியா -  அழகுராணி சமந்தா சாதித்த சினிமா!

தென்னிந்திய நடிகை சமந்தாவுக்கு இன்று 34வது பிறந்ததினம். அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

''நான் சென்னையின் பல்லாவரத்து பொண்ணு'' என பல விழா மேடைகளில் பெருமையாக சொல்லி க்யூட்டாக சிரித்த சமந்தா இன்று ஒரு ஸ்டார் குடும்பத்தின் மருமகள். இன்று தென் இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு ஆரம்பக்காலங்களில் தமிழ் சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கல்லூரி காலத்திலேயே மாடலிங் வாய்ப்பு, விளம்பரங்களில் நடிப்பு என திரைவாழ்க்கைக்கான அடித்தளமிட்டாலும் தமிழ்த்திரையுலகில் கால்பதிக்க அவருக்கு காலம் எடுத்தது. விளம்பரங்களில் சமந்தாவின் துடிப்பான நடிப்பைக் கண்ட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அவரை மாஸ்கோவின் காவேரி படத்தில் ஒப்பந்தம் செய்தார். அதுதான் சமந்தாவின் முதல் படம். ஆனால் திரையில் சமந்தா தோன்றியது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். 


பல்லாவரம் டூ தென் இந்தியா -  அழகுராணி சமந்தா சாதித்த சினிமா!

தமிழில் சிறிய வேடம் என்றாலும், அப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சமந்தா நாயகியாக கால்பதித்தார். முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்த திரைப்படமே அவரை ஸ்டார் குடும்பத்தின் மருமகளாகவும் ஆக்கியது. அப்படத்தில் நடித்த நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு 2017ல் அவரை மணந்தார் சமந்தா. சென்னை பெண் என்றாலும் தன்னுடைய திரைவாழ்க்கையை அழுத்தமாக தெலுங்கில் தொடங்கினார். அதன் பின்னர் அவர் தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார். பிருந்தாவனம், மகேஷ்பாபுவின் தூக்குடு போன்ற படங்கள் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தன. இந்தப்படங்கள் சமந்தா ஒரு தவிர்க்க முடியாத நாயகி என்றே தெலுங்கில் பதியவைத்தன. தெலுங்கில் அசுரவளர்ச்சி அடைந்தாலும் தமிழில் சரியான தொடக்கமின்றி தவித்தார் சமந்தா, அவருக்கு கைகொடுத்தது தெலுங்கு டப்பிங் படம் தான். நான் ஈ மூலம் தமிழில் வலம் வந்த ஈகா திரைப்படம் மூலம் தமிழிலும் அறியப்பட்டார் சமந்தா. 


பல்லாவரம் டூ தென் இந்தியா -  அழகுராணி சமந்தா சாதித்த சினிமா!

அந்த நேரத்தில் பெரிய இயக்குநர்களின் வாய்ப்புகள் சமந்தாவை தேடி வந்தன. சங்கரின் ஐ, மணி ரத்னத்தின் கடல் திரைப்படங்கள் வாய்ப்பாக வந்தபோது தோல் ஒவ்வாமையால் வாய்ப்புகளை நிராகரித்தார் சமந்தா. அதன் பின்னர் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையை தமிழ்த்திரையுலகுக்கு காட்டினார். அதன்பின்னர் சமந்தாவை தமிழில் கவனிக்கவைத்த திரைப்படம் அஞ்சான். படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் சமந்தாவுக்கு ஒரு நல்ல எண்ட்ரியாக அமைந்தது. அதன்பின்னர் கத்தி திரைப்படத்தின் விஜய் உடன் நடித்து தெலுங்குக்கு இணையான இடத்தை தமிழில் பிடித்தார். பின்னர் இடையிடையே தமிழில் சில படங்கள் சமந்தாவுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் தெறி, மெர்சல் போன்ற விஜய்-சமந்தா கூட்டணி ஹிட் அடித்தன. அதன்பின்னர் யூடர்ன், ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை போன்ற படங்களில் கவனிக்க வைத்தார் சமந்தா. இந்தி, மலையாளம் என்ற பூர்வீகத்தை உடைத்து தமிழ் பேசும் நம்ம ஊர் பெண் என்ற தனித்துவத்தால் எளிதில் ரசிகர்களை கவர்ந்தார் சமந்தா.


பல்லாவரம் டூ தென் இந்தியா -  அழகுராணி சமந்தா சாதித்த சினிமா!

நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் சமூக சேவையிலும் தன் பங்கை செலுத்தி வருகிறார் . ஏழைக்குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அவர்.  ஆட்டோ ஓட்டி தன்னுடைய 7 சகோதரிகளை காப்பாற்றி வரும் பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் கார் பரிசாக வழங்கி ட்ராவல்ஸ் தொடங்க உதவி செய்தது சமீபத்திய வைரல் .  மாடலிங் டூ தவிர்க்க முடியாத தென்னிந்திய நடிகை என தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வெற்றி பெற்ற சமந்தாவுக்கு இன்று 34வது பிறந்ததினம்.


பல்லாவரம் டூ தென் இந்தியா -  அழகுராணி சமந்தா சாதித்த சினிமா!

போட்டோஷூட், உடற்பயிற்சி, மாடித்தோட்டம் என தன் ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டீவாக சோஷியல் மீடியாவில் இணைந்திருக்கும் சமந்தாவுக்கு இன்று வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மகாராணியாக சமந்தாவை குறிப்பிட்டு காமென் டிபி வெளியிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் சமந்தாவுக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget