Rashmika Mandanna : என்னை ஒருபோதும் தடுக்காத மனிதர்..முன்னாள் காதலனோடு விஜய் தேவரகொண்டாவை ஒப்பிட்ட ராஷ்மிகா
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகைர் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா பற்றி உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்

இந்த பதிவில் விஜய் தேவரகொண்டா பற்றி ராஷ்மிகா கூறியிருந்தாலும் தனது முன்னாள் காதலன் ரக்ஷித் ஷெட்டியை பிரிந்த காரணம் குறித்தும் மறைமுகமாக பேசியுள்ளதை ரசிகர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள்.
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது கணவன் மனைவியாக புது வாழ்க்கையை தொடங்க இருக்கிறார்கள். இந்திய திரையுலக நடிகர் நடிகைகள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனக்கு திருமணமான மகிழ்ச்சியை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் விஜய் தேவரகொண்டா பற்றி இப்படி கூறியுள்ளார்
விஜய் தேவரகொண்டா பற்றி ராஷ்மிகா மந்தனா
“இப்போது உங்களுக்கு என்னுடய கணவர் விஜய் தேவரகொண்டாவை அறிமுகப்படுத்துகிறேன் உண்மையான காதல் எப்படி இருக்கும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர், அமைதியாக இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்குக் காட்டியவர்! தினமும் பெரிய கனவு காண்பது முற்றிலும் சரி, நான் எப்போதும் சாதிக்க முடியும் என்று நான் நினைப்பதை விட அதிகமாக சாதிக்க முடியும் என்று தொடர்ந்து என்னிடம் சொன்னவர்! யாரும் பார்க்காதது போல் என்னை நடனமாடுவதை ஒருபோதும் தடுக்காத மனிதன்.. நண்பர்களுடன் பயணம் செய்வதை எனக்குக் காட்டிய மனிதன் . இந்த மனிதனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடியும்! நான்எப்படிபட்டஒருபெண்ணாகஇருக்ககனவுகண்டேனோஅவளாகவேமாறஎனக்குஉதவியநபர்
விஜ்ஜு, உன் மீது எனக்கு இருக்கும் உணர்வுகளை விவரிக்க எனக்கு எப்போதும் வார்த்தைகள் இல்லை!! நான் எப்போதும் அதை உன்னிடம் சொல்லி வருகிறேன்!! ஆனால் திடீரென்று , என்னோட சாதனைகள், போராட்டங்கள், சந்தோஷம், சோகம், வாழ்க்கை - எல்லாமே இப்போ ரொம்ப அர்த்தமுள்ளதாக இருக்கு அதுக்குக் காரணம், இது எல்லாவற்றுக்கும் சாட்சியாக நீ என்னுடன் இருப்பதுதான்.
உன் மனைவியாவதற்கும் . உன் மனைவியாக அறியப்படுவதற்கும் , நான் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறேன். நாம் ஒன்றாக வாழ்ந்த மிகச்சிறந்த வாழ்க்கையை அனுபவிப்போம்! ஐ லவ் யு” என ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
முன்னாள் காதலன் ரக்ஷித் ஷெட்டி மீது விமர்சனமா ?
நடிகை ராஷ்மிகாவுக்கு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 21 . ரக்ஷித் ஷெட்டி நடித்த கிரிக் பார்ட்டி என்கிற திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. 2018 ஆம் ஆண்டு இந்த திருமணம் சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. திருமணத்திற்கு பின் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்க விரும்பியதாகவும் இதனால் ரக்ஷித் ஷெட்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தங்கள் திருமணன் ஏன் நிறுத்தப்பட்டது குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையாக பேசியதில்லை. தற்போது விஜய் தேவரகொண்டா குறித்த ராஷ்மிகா மந்தனாவின் பதிவில் அவர் தனது முன்னாள் காதலன் ரக்ஷித் ஷெட்டியை மறைமுகமாக தாக்கியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பெரிய கனவு காண்பது சரியானது என்று விஜய் தனக்கு உணர்த்தினார் என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளது. தான் ஆசைப்பட்ட ஒரு பெண்ணாக மாற விஜய் தனக்கு உதவினார் என்று அவர் கூறியிருப்பதும் தனது முன்னாள் காதலில் தனக்கு கிடைக்காத விஷயங்களாக அவர் கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.























