மேலும் அறிய

Suchitra: ”அந்த கூட்டம் தான் காரணம்” - சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..

ஒருநாள் கார்த்திக் குமார் காலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வரும்போது சிகரெட் அடித்திருந்தார். ஆனால் அவர் அதெல்லாம் செய்யவே மாட்டார். கேட்டால் ஏதோ பிராங்க் என சொல்கிறார்.

சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வெளியான பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் அவர்களாகவே கொடுத்தது தான் என பாடகி சுசித்ரா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, பாடகி என ஒரு காலக்கட்டத்தில் கலையுலகில் பிரபலமாக திகழ்ந்தார் சுசித்ரா. இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் 2017 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதற்கு காரணம் “சுச்சி லீக்ஸ்” என கூறப்பட்டது. அந்த பெயரில் பிரபலங்களான தனுஷ், ஸ்ருதிஹாசன், அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட பலரின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாடகி சுசித்ரா நீண்ட இடைவெளிக்குப் பின் நேர்காணல் ஒன்றில் சுச்சி லீக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதாவது, “சுச்சி லீக்ஸ் நடப்பதற்கு 24 மணி நேரம் முன்னாடி கார்த்திக் குமார் நண்பர் வீட்டில் இருப்பதாக கூறி என்னுடைய டிவிட்டர் கணக்குகளை பெற்றுக்கொண்டார். அவருக்கு தனுஷ், ஆண்ட்ரியா, விஜய் ஜேசுதாஸ் என ஒரு நண்பர்கள் குழு இருந்தது. அது யாரடி நீ மோகினி உருவான காலக்கட்டம். இவர்கள் அனைவரும் டார்க் சினிமா பார்த்து அதுபற்றி விவாதிப்பது இவர்கள் வேலையாகும். 

ஒருநாள் கார்த்திக் குமார் காலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வரும்போது சிகரெட் அடித்திருந்தார். ஆனால் அவர் அதெல்லாம் செய்யவே மாட்டார். கேட்டால் ஏதோ பிராங்க் என சொல்கிறார். அந்த நண்பர்கள் குழுவில் பிராங்க் செய்வது ஒரு வேலையாக இருந்துள்ளது. போனை எல்லாம் மாற்றிக்கொண்டு யாருக்காவது ஏதாவது மெசெஜ் அனுப்புவது இப்படியெல்லாம் நடந்தது. தனுஷ் கூட இயக்குநர் மித்ரன் ஜவஹர் போனில் இருந்து கார்த்திக் குமாருக்கு அசிங்கமாக மெசெஜ் அனுப்பியிருந்தாரு. அப்படி தான் சுச்சி லீக்ஸ் வெளியானது. 

அவர்கள் என்னை வைத்து பிராங்க் செய்தார்கள். ஏன் சுச்சி லீக்ஸில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாருமே புகார் செய்யவில்லை. அவர்கள் வேண்டுமென்றே கொடுத்த புகைப்படங்கள் தான் அவை. அதனை வெளியிட ஒருவருடைய ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்டது. கார்த்திக் குமார் என்னை பலியாடு ஆக்கி விட்டார். இதை ஒரு வருடம் கழித்து அவரே என்னிடம் சொன்னார். அதனால் தான் நாங்கள் விவாகரத்து பெற்றோம். 

நான் விவாகரத்து பெற்ற பிறகு எந்த நேர்காணலிலும் பேசவில்லை. ஆனால் கார்த்திக் ஒவ்வொரு இடமாக சென்று பேசினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. போங்கடா மொக்க பசங்களா என நினைத்துக் கொண்டேன்” என சுசித்ரா தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget