மேலும் அறிய

S.Ve.Sekhar: அமீர் விவகாரத்தில் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருக்க கூடாது - எஸ்.வி.சேகர் காட்டம்

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

அமீர் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கடந்த ஒருவாரமாக பருத்திவீரன் படம் தொடர்பான பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான அப்படம் தொடர்பாக இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதில் ஞானவேல் அமீரை தரக்குறைவாக விமர்சிக்க, அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, சினேகன், பொன்வண்ணன், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜாவை கண்டித்தனர். 

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஞானவேல் ராஜா, அதில் அமீரை தரக்குறைவாக நேர்காணல் ஒன்றில் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினைகள் உண்மை என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்தது. ஞானவேல் வருத்தம் தெரிவித்த அறிக்கைக்கு, நடிகர் சசிகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார். 

இதற்கிடையில் நேற்று சென்னை வடபழனி பிரசாத் லேப்பில், ”எமகாதகன்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அமீர் - ஞானவேல் இடையேயான பிரச்சினை குறித்து பேசினார். 

அப்போது, “எனக்கு சினிமாவில் ரொம்ப பிடிச்சது அமீர் தான். இஸ்லாமியரான அவர் தன்னுடைய சொந்த பெயரை மறைத்துக் கொள்ளாததால் அவரை எனக்கு பிடிக்கும். சில பேர் சினிமாவில் பெயரை மாற்றிக் கொள்வார்கள். அது தேவையே இல்லை. சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட சினிமாவில் சமீபத்தில் நடைபெற்ற அமீர் - ஞானவேல்ராஜா பிரச்சினை ஏற்பட்டிருக்க கூடாது. ஒரு தயாரிப்பாளரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் இருக்கலாம். ஆனால் அதை கிரியேட்டராக இருக்கும் இயக்குநர் தான் ஸ்க்ரீனுக்கு கொண்டு வருகிறார். படம் வந்து ஜெயிச்ச பிறகு, 10 வருஷம் கழிச்சி அதைப் பற்றி தப்பா பேசுறது சரியான விஷயம் கிடையாது. 

ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். வருத்தம் தெரிவித்திருக்க கூடாது. நமக்கு பிடிச்சதை செய்தால் அவரை ஆஹா ஓஹோ என பேசலாம். பிடிக்காததை செய்தால் அவரை பொதுவெளியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது தவறான விஷயம். மேலும் மன்னிப்பு கேட்டதை விட அந்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் தான் பேசப்படும் என்பதால் நியாயமாக ஞானவேல்ராஜா அமீர் பற்றிய பேசிய அந்த நேர்காணலை நீக்கம் செய்ய சொல்லியிருக்க வேண்டும். அதுதான் சரியான முறை” எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Bigg Boss 7 tamil: தன் பெயரை தமிழில் தப்பாக எழுதிய ஜோவிகா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..

தலைப்பு செய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget