மேலும் அறிய

HBD Na.Muthukumar: முத்தம் காமத்தைச் சார்ந்தது அல்ல - பாடல் வரிகளில் உயிர்த்தெழும் நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமாரின் 47வது பிறந்தநாள் இன்று! காதல் ஜோடிகள், ஒருதலையாக காதலிப்பவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என அனைவருக்குமான பாடல்களை உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார்

கவிஞர் நா.முத்துக்குமாரின் 47வது பிறந்தநாள் இன்று. பள்ளி ஆசிரியருக்கு மகனாய்ப் பிறந்து, உதவி இயக்குனராய் பணிபுரிந்து, பின்னர் பாடலாசிரியராக அவதரித்தவர் நா.முத்துக்குமார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தாயை இழந்தார். தாயின் மடியில் வளர வேண்டிய பருவத்தில் தந்தையின் வழிகாட்டுதலால் தமிழின் மடியில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பச்சையப்பா கல்லூரியில்  தமிழ் இலக்கியம் படித்தார். உயர் கல்வியில் பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவராகவும் விளங்கினார்.

"தமிழ் திரைப்பட பாடல்கள் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் பி.ஹச்டி ஆராய்ச்சியும் மேற்கொண்டார். சீமான் இயக்கிய 'வீரநடை' என்ற படத்தில் தன் பாடலாசிரியர் பயணத்தை தொடங்கினார். "முத்து முத்தாய் பூத்திருக்கும் முல்லை பூவை புடிச்சிருக்கு" எனத் தொடங்கும் அந்த பாடல் அதிக உவமை உருவகங்கள் கொண்ட பாடல் என்ற பெருமைக்கு உரியதாகும். இவரின் கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் வானமே எல்லை. 

அவரது வரிகளின் ரீவைண்ட்!


HBD Na.Muthukumar: முத்தம் காமத்தைச் சார்ந்தது அல்ல - பாடல் வரிகளில் உயிர்த்தெழும் நா.முத்துக்குமார்

காதல், நட்பு, பிரிவு, அப்பா மகள் உறவு, அப்பா மகன் உறவு என இவர் தொடாத இடங்களே இல்லை. மிகவும் உன்னதமாகக் கருதப்படும் அப்பா மகள் உறவுக்காக இவர் எழுதிய வரிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றது. "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது அல்ல என்று" என்ற  வரிகளில் தந்தை மகளின் உறவின் உன்னதத்தை ஒரு படி மேலே சென்று பார்த்து விட்டார் போலும் இவர்!

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு" என்ற பாடலில் 'தாயாக தந்தை மாறும் ஒரு காவியம்' என ஆண்களுக்கும் தாய்மை உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் திரைப்பட பாடல்களின் பட்டியலில் மகள்களால் போற்றப்படும் அப்பாக்களை விட மகன்களால் போற்றப்படும் அப்பாக்கள் மிகக் குறைவே…. ஒவ்வொரு மகன்களுக்கும் அவர்களின் தந்தையின் அருமையை உணர்த்திய பாடல், இவர் எழுதிய "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல். இந்த பாடலைக் கேட்டு கண் கலங்காத ஆளே இல்லை எனலாம். இவரது வரிகள் அனைத்தும் நம்பிக்கையை விதைக்கும் வாழ்க்கையை வெறுத்து சோர்ந்து போய் உட்காரும் நொடியில் புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற இவரது ஒரு நாளில் என்ற பாடலைக் கேட்டால் விழுந்தால் என்ன மீண்டும் எழுந்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்றும்.

தீபாவளி படத்தில் இடம் பெற்ற "போகாதே போகாதே" என்ற பாடல் காதல் பிரிவையும், ஒரு தலை உணர்வுகளையும் அழகாக எடுத்துக்காட்டும். "கல்லறையின் மீது ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி" என்ற வரிகளில் காதல்  மரணத்தைத் தாண்டி வாழும் சக்தி பெற்றது எனக் கூறியிருப்பார். 

"கல்லறை மீதுதான் பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதோ" என்ற வரிகளில் காதலின் இயலாமையை பற்றி பேசி இருப்பார். இவரது பாடல்கள் இப்படித்தான் எனக் கூறவே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு பாடலும், ஏன் ஒவ்வொரு வரியும்  தனித்துவமானது. 

கவிதைகளின் தொகுப்பு இவரது பாடல்:


HBD Na.Muthukumar: முத்தம் காமத்தைச் சார்ந்தது அல்ல - பாடல் வரிகளில் உயிர்த்தெழும் நா.முத்துக்குமார்

பல கவிதைகளை தொகுத்தே ஒரு பாடலாய் எழுதியிருப்பார். இவரது பாடல்கள் ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை தான். மன்மதன் படத்தில் உள்ள "காதல் வளர்த்தேன்" பாடலில் அனைத்து வகையான ரசிகர்களையும் பிடித்துவிட்டார். காதல் ஜோடிகள், ஒருதலையாக காதலிப்பவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என அனைவருக்குமான பாடல்களை உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார். நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவரே !

அழகுக்கு இலக்கணம் வகுத்த 'அழகோ அழகு' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். கடைசியாக, இவர் பாடல் எழுதிய படம் 'தரமணி'. அப்படத்திலும் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். நா.முத்துக்குமார் இடம்பெறாத ப்ளேலிஸ்ட்டே  இல்லை. அதிலும் யுவன் நா.முத்துக்குமார் காம்போ அல்டிமேட். ஒரு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்தால் படம் ஹிட் ஆகுதோ இல்லையோ பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். இவரது மறைவுக்குப் பின் யுவனின் இசை சற்று மந்தமாகவே இருக்கின்றது. நா.முத்துக்குமாரின் வரிகள் இல்லாமல் போனதே அதற்கு காரணமாக இருக்குமோ என்னவோ…

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்… என்று எண்ணித்  தவிக்கும் இவரது ரசிகர்களுக்கு மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்கும் விதமாய் அவர் பாடல் வரிகளின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எதிரில் தோன்றுகிறார் நா.முத்துக்குமார். 




மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு..ராதிகா சரத்குமார் பாராட்டு
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு..ராதிகா சரத்குமார் பாராட்டு
திருமண கொண்டாட்டம் முடிந்ததும் அடுத்த ப்ளான்..ராஷ்மிகாவை வெட்கப்பட வைத்த விஜய் தேவரகொண்டா
திருமண கொண்டாட்டம் முடிந்ததும் அடுத்த ப்ளான்..ராஷ்மிகாவை வெட்கப்பட வைத்த விஜய் தேவரகொண்டா
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget