திருமண கொண்டாட்டம் முடிந்ததும் அடுத்த ப்ளான்..ராஷ்மிகாவை வெட்கப்பட வைத்த விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேறு விழா இன்று ஹைதராபாதில் கோலாகலமாக நடைபெற்றது

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இன்று ஹைதராபாத்வில் இந்த தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தென் இந்திய திரைத்துறையின் முக்கிய நடிகர் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விஜய் தேவரகொண்டா தனது மனைவி ராஷ்மிகாவை தெலுங்கு பேசும் மாநிலங்களின் புதிய மருமகள் என்று குறிப்பிட்டார்.
7 ஆண்டுகள் காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஐடிசி மொமெண்டோஸ் நட்சத்திர விடுதியில் இருவரது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இந்த தம்பதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அமித்ஷா ஆகிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஆசி பெற்றனர். புதிதாக திருமணமான இந்த ஜோடியின் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
திருமண வரவேற்பு விழா
இன்று ஹைதராபாத்வில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ள இருந்தார்கள். ஆனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக குறைவான நபர்களுக்கே நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி , நாக சைதன்யா , நானி , பின்னணி பாடகர் சித் ஶ்ரீராம் , நடிகை ராதிகா , சரத்குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் திருமண தம்பதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர் . விஜய் தேவரகொண்டா பேசுகையில் " நாங்க இங்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் பெறவே வந்திருக்கிறோம். தெலுங்கு பேசும் மாநிலங்களுக்கு ஒரு புதிய மருமகள் வந்திருக்கிறார். அவரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியாக அண்டகிரவுண்டில் பதுங்க இருக்கிறோம்' என்று விஜய் தேவரகொண்டா பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















