Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
திருடி பட்டம் கட்டி சாமுண்டீஸ்வரியை ஊரார்கள் அசிங்கப்படுத்திய நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கண் கலங்கிய சாமுண்டீஸ்வரி:
அதாவது சாமுண்டீஸ்வரி தனது அம்மா போட்டோ முன்பு நின்று, "உனக்கு திருட்டு பட்டம் கட்டின மாதிரி எனக்கு திருட்டு பட்டம் கட்டிட்டாங்க.. என் பொண்ணு ரேவதியை வேற கைது பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த ராஜா சேதுபதியோட பேரன் தான். இப்போ எனக்கு என்ன பண்றது?"ன்னு தெரியல என கண் கலங்கி அழுகிறாள்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதியை திரும்பி வந்து சந்தித்து, "நீ எதுக்கு இப்படி பண்ண? நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்"ல என்று கேட்க, "நீங்க வெளியே இருந்தா தான் உண்மையை கண்டுபிடித்து அம்மாவை காப்பாற்ற முடியும். அதனாலதான் இப்படி செய்தேன்" என ரேவதி சொல்கிறாள். பிறகு கார்த்திக் "கவலப்படாத கூடிய சீக்கிரம் உண்மையை கண்டுபிடித்து உன்னை வெளியே கொண்டு வருவேன்" என வாக்கு கொடுக்கிறான்.
கார்த்தியை அலையவிட்ட சந்திரகலா, சிவனாண்டி:
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த ஊர்காரர்கள், அவரை அவமானப்படுத்தி பேச சாமுண்டீஸ்வரி "வெளிய போங்க" என கோபப்படுகிறாள். கார்த்தியும் மயில் வாகனமும் என்ன செய்வது எனப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவனுக்கு இந்த நகைகள் குறித்த உண்மை தெரியும் என்று நபர் ஒருவரிடம் இருந்து போன் வருகிறது.
அவர் சொல்லும் இடத்திற்கு கார்த்திக் செல்ல அங்கு யாரும் இல்லாமல் இருக்கின்றனர். இப்படி கார்த்தியை இங்கும் அங்குமாக அலைய விட, கடைசியில் அது சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் அவன் எதிரே வந்து "இதெல்லாம் பண்ணது நாங்க தான் உன்னால ஒன்னும் பண்ண முடியாது" என சவால் விடுகின்றனர்.
மேலும் வீட்டுக்கு வந்த சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் செய்திகளில் வந்த செய்திகளை காண்பித்து மீண்டும் சாமுண்டீஸ்வரியை காயப்படுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























